இந்த மாதிரி படங்கள் தான் நம் வயதை நினைவூட்டிச் செல்கின்றன.
இராம்நாட் தங்கம் தியேட்டரில், நுழைவாயிலுக்கருகில் நண்பர்களோடு 3 மணிநேரமும் நின்று கொண்டே பார்த்ததை நினைவடுக்களிலிருந்து இப்பவும் மீட்டிக் கொள்ள முடிகிறது.
நவீனத்தை கடவுளாகக் கருதிய கல்லூரிப் பருவமது. சக்தியும்(கமல்) அங்கே எங்களைத்தான் பிரதிபலித்தார். மரபுகளின் எச்சம் தான் நாமென்றறியாத இளங்கன்றாக கௌதமியுடன் ஒன்றிப் போயிருந்தவரை, காலம் மரபெனும் பாடத்தை படிக்கவைக்கிறது ரேவதியின் துணையோடு.
நவீனத்தில் நாம் திளைப்பதற்கும், அதில் நம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் மரபுகளின் குறைகளை களையவேண்டும் என்றுணர்கிறார் சக்தி.
மரபுகளை அறியாமல் இது சாத்தியமில்லை என்பதையும் உணர்ந்து, அதற்கான வேள்வித் தீயில் தன்னையே இழந்து மரபுகளின் வழியே நவீனத்தை மீட்டெடுக்கிறார்.
ஒரு சமுதாயமோ அல்லது மொத்த மனிதகுலமோ முன்னகர்வது, இப்படிப்பட்ட சக்தி போன்றவர்களின் தியாகங்களால் தான்.
கமல் அந்த சக்திவேலாக மாறுவாரா?