**ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல
நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே….**
வாலியின் இந்த அவதார வரிகள், உலகத்தின் கால ஓட்டத்தை ஓடையின் நீரோட்டத்தோடு ஒப்பிட்டு, நம் மனதையும் நினைவுகளின் ஓட்டமாக உருவகித்திருக்கிறது.
மனதென்னும் நீரோடையில் ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகள் நிலையற்றவை. உலகம் அதன் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் காலத்தின் சாட்சியென்றால், மனம் அதன் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகளின் சாட்சி மட்டுமே. அகத்தையும் புறத்தையும் இணைக்கும் குறுந்தொகை போன்ற தமிழ் சங்க இலக்கியங்களில் வெளிப்படும் உயர்தர கவித்துவ இரசனையிது.
உலகின் தலைசிறந்த ஆளுமைகள் ஏன் கவிஞர்களிடம் அணுக்கமாக இருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. கலைஞரும் வாலியும் நினைவில் வந்து போனார்கள். இப்பதிவை எழுதுவதற்காக உறைய வைத்திருந்த பாடலை நதிபோல என்னுள் மீ்ண்டும் ஓடவிட்டேன்.
**தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல…**