வெள்ளியில் கண்டடைந்த தங்கம்

அணைந்திருந்த கைப்பேசியின் தொடுதிரையை ஆட்காட்டிவிரலால் இரண்டு தட்டு தட்ட, அப்போதுதான் அணைந்திருந்த  திரை உயிர்பெற்றுக் கொண்டது.   அணையும் முன்னர் கூகுள் வழிகாட்டியோடு ஒன்றிப் போயிருந்தேன், சென்னையின் வெள்ளிக் கிழமை முன்னிரவின் சிடுக்கில்(traffic) சிக்கிக் கொண்டு.   எறும்பாய் ஊறிக்கொண்டிருந்தது….இல்லை நத்தையாய் நகர்ந்து கொண்டிருந்தது நான் பயணித்துக் கொண்டிருந்த நாலிருளியுந்து (car).   மின்தொடர்வண்டியைப் (electric train) பிடித்துவிட முடியுமா என்ற கவலையோடு சற்று தலை தூக்கி ஆடியின் (கண்ணாடி) வழியாக வெளியுலகை  நோக்கினேன். தானியங்கி துடைப்பான்… Continue reading வெள்ளியில் கண்டடைந்த தங்கம்

தேவர் மகனுக்கு 25 வயது

http://cinema.vikatan.com/tamil-cinema/106035-vadiveluss-salary-meena-was-first-choice-devar-magan-rewind.html இந்த மாதிரி படங்கள் தான் நம் வயதை நினைவூட்டிச் செல்கின்றன. இராம்நாட் தங்கம் தியேட்டரில், நுழைவாயிலுக்கருகில் நண்பர்களோடு 3 மணிநேரமும் நின்று கொண்டே பார்த்ததை நினைவடுக்களிலிருந்து இப்பவும் மீட்டிக் கொள்ள முடிகிறது. நவீனத்தை கடவுளாகக் கருதிய கல்லூரிப் பருவமது. சக்தியும்(கமல்) அங்கே எங்களைத்தான் பிரதிபலித்தார். மரபுகளின் எச்சம் தான் நாமென்றறியாத இளங்கன்றாக கௌதமியுடன் ஒன்றிப் போயிருந்தவரை, காலம் மரபெனும் பாடத்தை படிக்கவைக்கிறது ரேவதியின் துணையோடு. நவீனத்தில் நாம் திளைப்பதற்கும், அதில் நம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் மரபுகளின்… Continue reading தேவர் மகனுக்கு 25 வயது

மெழுகுவர்த்தியுடன் ஒரு இரவு

பெரும்பாலும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் மாலை வேளையில் வழியிலுள்ள சேட்டன் கடையில் பாலில்லா தேநீருக்காக தஞ்சமடைவதுண்டு.  மழைக்கால மாலை வேளையென்றால், தேநீரிலிருந்து பறக்கும் ஆவி முகத்தில் படர்ந்துணர்த்தும் வெம்மை கூடுதல் உற்சாகம் தான். இந்த உற்சாகத்தில் விளைந்த புனைவுதான், இந்த "மெழுகுவர்த்தியுடன் ஓர் இரவு"... ‎*மெழுகுவர்த்தியுடன் ஒரு இரவு* சுற்றிப் பொருட்கள் இருக்கின்றன என உணரமுடிந்த கும்மிருட்டு. தினந்தோறும் வாசம் செய்யும் வீடுதான் என்றாலும் தட்டுத்தடுமாறிதான் தீப்பெட்டியைத் தேடி உரசி மெழுகுவர்த்தியைத் தேட வேண்டியிருந்தது. நான்கு… Continue reading மெழுகுவர்த்தியுடன் ஒரு இரவு