This is the post excerpt.
பெயரற்ற யாத்ரீகன்
நதியோட்டத்தில் மிதந்து செல்லும் கிளையில்பாடிக்கொண்டிருக்கின்றனபூச்சிகள், இன்னமும் - கொபயாஷி இஸ்ஸாInsects on a bough/ floating downriver,/ still singing - Kobayashi Issaநிகழ்காலத்தை நீட்டிப்பது அல்லது நிரந்தரமானதாக ஆக்குவது தான் ஜென் கவிதை என்கிறார் இக்கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்திருக்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். கிட்டத்தட்ட Living in the present ( கணத்தில் வாழ்வது ) என்ற ஜெகி (ஜெ. கிருஷ்ணமூர்த்தி)யின் ஆப்த வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது. நிகழ்காலத்தை நிரந்தரமாக்குவது என்பது, கடந்தவைகளையும்,… Continue reading பெயரற்ற யாத்ரீகன்
அன்பே சிவம்
How long does the Train stop here? என்பதை மென் முகத் தசைகள் மட்டுமே அசையும் மிகையற்ற உடல் மொழி முதல், தன் குதி காலிலிருந்து, அடிவயிறு, கைகள் வழியாக முகம் வரை அதிரும் மிகையான உடல் மொழி வரை கேட்க வைக்கிறது, அதற்குத் திரும்பத் திரும்ப அந்த ஸ்டேஷன் மாஸ்டரால் சொல்லப்பட்ட Two to Two to Two two என்ற பதிலை புரிந்து கொள்ள முடியாத அன்பரசு என்ற A.Ars (not Ass… Continue reading அன்பே சிவம்
The Last Supper – யூதாஸின் பார்வையில்
ஏனோ நினைவுக்கு வந்ததுயூதாஸ் காரியத் இயேசுவைத் தழுவி முத்தமிட்டு காட்டிக் கொடுத்ததுஅப்போது கேட்டது அந்த கட்டித்தழுவலுக்குள்ளிருந்து யாரோ- ஒரு மூன்று தலைகளுடைய ஒருவன்-சிரித்த குரல்:பரஸ்பர உடைமை வெறியின் சாத்தான்பரஸ்பர ஆறுதலை வளங்கும் கருணாமூர்த்தி,தான் ஆளுதற்கு வேண்டி ஓர் பாவ உலகைப் படைத்த கடவுள். - கவிஞர் தேவதேவன்கருணாமூர்த்தி என்ற சிறகை இயேசுவிற்கு அவருடைய சீடர்களும், மக்களும் வழங்குவதற்கு முன்பு, உடைமை வெறி கொண்ட சாத்தான் என யூதாஸ் முடமாக்கப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த அந்த இறுதி இரவு விருந்தை… Continue reading The Last Supper – யூதாஸின் பார்வையில்
ஆரோக்கிய நிகேதனம் – சில புரிதல்கள்
நிகழ்காலம், கடந்தவைகளுடன் கொள்ளும் ஓர் உறவின் விளைவுதான் நவீனமாக இருக்க முடியும். இவ்வுறவை ஒரு முரணியக்கம் என்றும் சொல்ல முடியும். புகழ்பெற்ற ஜெர்மானிய தத்துவ மேதையான ஹெகலின் இயங்கியலின் படி இந்த முரணியக்கத்தின் விளைவு மேம்பட்ட ஒன்றாகத் தான் இருக்க முடியும். மேலும் இந்த முரணியக்கம் தொடர்ச்சியான ஒன்றும் என்கிறார். இதன்படி நவீனம் எப்போதுமே மேம்பட்டது மற்றும் இன்றைய நவீனம் நாளை மரபாகி விடுகிறது எனலாம். நவீனத்திற்கும், மரபுக்கும் இடையே நடக்கும் இம்முரணியக்கம், மரபின் இடைவெளிகளை கண்டு… Continue reading ஆரோக்கிய நிகேதனம் – சில புரிதல்கள்
துறவும் இடமும்
துறவு கடல் நீரினின்று மேகங்கள் எதை உதறி லேசாகின்றன? பொழிய நோக்கும் திசையிலுள்ள பூமியை. - கவிஞர் தேவதேவன் இங்கிருந்து கிளம்பிச் செல்வது, மீண்டும் இங்கே திரும்பி வருவதற்காகத் தான் என்கிறதா இக்கவிதை? துறவு என்பது விட்டுச் செல்வதல்ல, விலகி நிற்பது என்கிறதா? இவ்வுலகின் அல்லது பிரபஞ்சத்தின் காரணத்தை ஊகித்தறிய முற்பட்ட பண்டையகால இந்தியத் தத்துவங்கள், குறிப்பாக உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்ட வேதாந்தத் தத்துவங்கள், அதனை பிரம்மம் என வரையறுத்தன. இப்பிரம்மத்தின் பரிணாம வளர்ச்சியே இவ்வுலகம்… Continue reading துறவும் இடமும்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சில வருடங்களுக்கு முன்பு அலுவலகத்தின் ஆண்டு முடிவு கொண்டாட்டங்களுக்காக, ஒட்டு மொத்த அலுவலகமும் கண்ணை பசுமையில் நனைக்கும் ஒரு Resortல் கூடியிருந்தோம். ஒரு 500 நபர்களுக்கு மேல் கலந்து கொண்ட நிகழ்வது. கும்பல் கும்பல்களாக அங்கு பரந்திருந்த பசும்புல் மேடுகள் மேல் புரண்டு கொண்டிருந்தனர். எந்நேரமும் மழை வரலாம் என்பதற்கான குளிர் காற்று இதனை ஏதுவாக்கியிருந்து. ஆனால் ஒரு சில பெண்கள் மட்டுமே கொண்ட கும்பல், அந்த மேட்டிலிருந்து தவ்வி வரவிருக்கும் மழையை முதன் முதலாக தொட்டு… Continue reading சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
ரிதமும் பண்பாடும்
நடையில் ஒரு மெல்லிய துள்ளல் இருந்தது மீனாவிடம். பறக்க எத்தனித்து சற்று தூரம் மட்டுமே பறந்தடங்கும் கோழி போலிருந்த மனத்திற்கு, இன்று உண்மையான சிறகுகள் கிடைத்து விட்டது போலிருந்தது அந்த துள்ளல் நடை. அர்ஜூனை பார்த்து தன் காதலை வெளிப்படுத்தும் தெளிவைப் பெற்றதனால் வந்தது இந்த மென் துள்ளல். இருவருமே தங்கள் துணையை ஒரே ரயில் விபத்தில் இழந்தவர்கள். இது இயல்பாகவே ஒருவர் மேல் ஒருவர் ஈர்ப்பும், பச்சாதாபமும் கொள்வதற்கு காரணமாகிறது என்ற மையச்சரடை ஒட்டி அருமையா… Continue reading ரிதமும் பண்பாடும்
பஞ்சபூதங்களும் முகவடிவாகும்
தன்னைத் தன் உணர்வுகளுக்கு ஏற்ப வெளிப்படுத்திக் கொள்ள முடியாத முகம், இயல்பாகவே ஒரு சோகத்தன்மையை கொண்டிருக்கிறது. சலங்கை ஒலியில் வரும் கமல் மற்றும் குறிப்பாக ஜெயப்பிரதாவின் முகங்கள் போல. ஆனால், புறவுலத்தின் சீண்டல்கள் ஒரு எல்லையை மீறும்போது இயல்பாகவே கமலின் உருவத்தை எடுத்துக் கொண்ட அந்த நாட்டிய கலைஞனின் செருக்குணர்வு உடம்பு முழுவதும் முகமாய் மாறி வெளிப்படுகிறது. இடுப்பில் தன் இரு கைகளையும் அமர்த்தியவாறு, தன் வலக் காலணியை இடப்பக்கமும், இடக்காலணியை வலப்பக்கமும் உதறி வீசுவதில் ஆரம்பிக்கும்… Continue reading பஞ்சபூதங்களும் முகவடிவாகும்
பனிவிழும் இரவு
பதாகை இதழில் வெளிவந்த எனது முதல் சிறுகதை. https://padhaakai.com/2018/02/10/white-night/ அப்புகையை நோக்கியவாறு பொழிந்திருந்த பனியில் கால்புதைய நடந்தது, அணிந்திருந்த மூன்றடுக்கு உடை தக்க வைத்திருந்த வெப்பம் போதவில்லை என உணர்த்தியது. கொஞ்சம் வெப்பம் வேண்டி ஊரிலிருந்து எடுத்து வைத்திருந்த தங்க வடிப்பான் ஒன்றை கட்டில் இருந்து உருவி பற்ற வைத்துக் கொண்டேன். அவர்கள் மரக் கட்டைகளை எரித்து கனன்று கொண்டிருந்தார்கள். நான் என்னை எரித்து…
கனவும் சாத்தியமும்
2020ம் ஆண்டிற்கான குமரகுருபன்-விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் கவிஞர்களுக்கான விருதைப் பெற்ற வேணு வேட்ராயன் அவர்களுடைய கவிதைகள் பற்றிய சிறப்புரையின் காணொளியும் அதன் கட்டுரை வடிவமும். நிகழ்வு பற்றிய அறிவிப்பு: https://www.jeyamohan.in/166789/ அனைவருக்கும் வணக்கம். கவிஞர் குமரகுருபன் அவர்கள் நினைவாக வழங்கப்படும் இவ்விருது விழாவில், இந்த வாய்ப்பை எனக்களித்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு நன்றி. இந்த வாய்ப்பு கிடைத்தபோது சற்றுத் தயங்கினேன். இன்னமும் , நான் கவிதைகளின் ஆரம்பகட்ட வாசகன் தான். படிமங்களுக்கு சிறகளித்து பறவை போல்… Continue reading கனவும் சாத்தியமும்