ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்டின் பசுமையைத் தவிர வேறெதுவுமில்லாத சமவெளிக் காட்டில் இருந்தது அந்த ஜமீன் பங்களா. அங்குள்ள பசுமையால் அறுபடாத பௌர்ணமி நிலவின் முழுத்தோற்றத்தை அந்த பங்களாவின் ஜன்னலின் வழியாக தழுவலாம் என்று தோன்றும். மேலும் ஆள் அரவமற்ற அந்த சமவெளியில் அந்த பௌர்ணமி இரவில் குதிரையின் மேலமர்ந்து பயணிக்கும் ஒரு நகரவாசியின் மனநிலை…வனவாசி என்ற பிரசித்தி பெற்ற வங்காள நாவலில் (விபூதிபூஷணின் ஆரண்யக) வரும் இக் காட்சிகள் ஒரு நகரவாசிக்கு அளிக்கும் கண நேர… Continue reading ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்

Advertisement

IPL – கிரிக்கெட்டின் நுழைவாயில்

He came down the track and converted that what it supposed to be good length delivery into a full toss, and despatched it to the mid wicket fence… He comes into the line of that in swing delivery to give himeself a room for that extra cover six… It trapped him in the crease infront… Continue reading IPL – கிரிக்கெட்டின் நுழைவாயில்

தேவதேவனின் தையல்

நேற்றையும், நாளையையும் இன்றிலிருந்து பிரித்தெடுத்தது போல் இருந்தது, கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த கோலம். இன்றால் மட்டுமேயான அம்முகம், கிட்டத்தட்ட காலத்திலிருந்து விடுதலை கிட்டியது போன்று பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஆனால், காலம் வலியது. இன்றில் மட்டுமே இருப்பது நிர்வாணத்திற்குச் சமம் என்று அப்புனிதனின் நேற்றும் நாளையுமாகிய கைகளை சிலுவையில் இருந்து பிரித்தெடுத்து அவரின் நிர்வாணத்தை, விடுதலையை காவு வாங்கிக் கொண்டது. கிறிஸ்துவும் வேறு வழியின்றி உயிர்த்தெழுந்தார், மீண்டும் காலத்தில் சிறைபட்டிருக்க; மீண்டும் இப்பாவிகளை நல்வழிப்படுத்த. ஏனோ தெரியவில்லை, ஈஸ்டர்… Continue reading தேவதேவனின் தையல்

அனுபவமும் கலையும்

எழுத்தாளர் என்.ஸ்ரீராம் கதைகளைப் பற்றிய நற்றுணை கலந்துரையாடலில் பேசிய காணொளியும் அதன் உரை வடிவமும். அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இந்த வாய்ப்பினை எனக்களித்த நற்றுணை அமைப்பினருக்கு நன்றி. சிறு வயதில் எனக்குப் பரிட்சயமாயிருந்த ஆறுமுகக் காவடிகளையும், முனி விரட்டிகளையும்  என்னுடைய நினைவடுக்களில் இருந்து மேலெலும்பி வரச்செய்த ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி.  தமிழ் விக்கி இவ்வுரைக்கான தயாரிப்பின் போது, Google என்னை கைப்பிடித்து அழைத்துச் சென்ற இடம் தமிழ் விக்கி தளத்திற்கு. ஒரு ஐந்து நிமிட வாசிப்பில்… Continue reading அனுபவமும் கலையும்

பெயரற்ற யாத்ரீகன்

நதியோட்டத்தில் மிதந்து செல்லும் கிளையில்பாடிக்கொண்டிருக்கின்றனபூச்சிகள், இன்னமும் - கொபயாஷி இஸ்ஸாInsects on a bough/ floating downriver,/ still singing - Kobayashi Issaநிகழ்காலத்தை நீட்டிப்பது அல்லது நிரந்தரமானதாக ஆக்குவது தான் ஜென் கவிதை என்கிறார் இக்கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்திருக்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். கிட்டத்தட்ட Living in the present ( கணத்தில் வாழ்வது ) என்ற ஜெகி (ஜெ. கிருஷ்ணமூர்த்தி)யின் ஆப்த வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது. நிகழ்காலத்தை நிரந்தரமாக்குவது என்பது, கடந்தவைகளையும்,… Continue reading பெயரற்ற யாத்ரீகன்

அன்பே சிவம்

How long does the Train stop here? என்பதை மென் முகத் தசைகள் மட்டுமே அசையும் மிகையற்ற உடல் மொழி முதல், தன் குதி காலிலிருந்து, அடிவயிறு, கைகள் வழியாக முகம் வரை அதிரும் மிகையான உடல் மொழி வரை கேட்க வைக்கிறது, அதற்குத் திரும்பத் திரும்ப அந்த ஸ்டேஷன் மாஸ்டரால் சொல்லப்பட்ட Two to Two to Two two என்ற பதிலை புரிந்து கொள்ள முடியாத அன்பரசு என்ற A.Ars (not Ass… Continue reading அன்பே சிவம்

The Last Supper – யூதாஸின் பார்வையில்

ஏனோ நினைவுக்கு வந்ததுயூதாஸ் காரியத் இயேசுவைத் தழுவி முத்தமிட்டு காட்டிக் கொடுத்ததுஅப்போது கேட்டது அந்த கட்டித்தழுவலுக்குள்ளிருந்து யாரோ- ஒரு மூன்று தலைகளுடைய ஒருவன்-சிரித்த குரல்:பரஸ்பர உடைமை வெறியின் சாத்தான்பரஸ்பர ஆறுதலை வளங்கும் கருணாமூர்த்தி,தான் ஆளுதற்கு வேண்டி ஓர் பாவ உலகைப் படைத்த கடவுள். - கவிஞர் தேவதேவன்கருணாமூர்த்தி என்ற சிறகை இயேசுவிற்கு அவருடைய சீடர்களும், மக்களும் வழங்குவதற்கு முன்பு, உடைமை வெறி கொண்ட சாத்தான் என யூதாஸ் முடமாக்கப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த அந்த இறுதி இரவு விருந்தை… Continue reading The Last Supper – யூதாஸின் பார்வையில்

ஆரோக்கிய நிகேதனம் – சில புரிதல்கள்

நிகழ்காலம், கடந்தவைகளுடன் கொள்ளும் ஓர் உறவின் விளைவுதான் நவீனமாக இருக்க முடியும். இவ்வுறவை ஒரு முரணியக்கம் என்றும் சொல்ல முடியும். புகழ்பெற்ற ஜெர்மானிய தத்துவ மேதையான ஹெகலின் இயங்கியலின் படி இந்த முரணியக்கத்தின் விளைவு மேம்பட்ட ஒன்றாகத் தான் இருக்க முடியும். மேலும் இந்த முரணியக்கம் தொடர்ச்சியான ஒன்றும் என்கிறார். இதன்படி நவீனம் எப்போதுமே மேம்பட்டது மற்றும் இன்றைய நவீனம் நாளை மரபாகி விடுகிறது எனலாம்.  நவீனத்திற்கும், மரபுக்கும் இடையே நடக்கும் இம்முரணியக்கம், மரபின் இடைவெளிகளை கண்டு… Continue reading ஆரோக்கிய நிகேதனம் – சில புரிதல்கள்

துறவும் இடமும்

துறவு கடல் நீரினின்று மேகங்கள்  எதை உதறி லேசாகின்றன? பொழிய நோக்கும் திசையிலுள்ள பூமியை.     - கவிஞர் தேவதேவன் இங்கிருந்து கிளம்பிச் செல்வது, மீண்டும் இங்கே திரும்பி வருவதற்காகத் தான் என்கிறதா இக்கவிதை? துறவு என்பது விட்டுச் செல்வதல்ல, விலகி நிற்பது என்கிறதா? இவ்வுலகின் அல்லது பிரபஞ்சத்தின் காரணத்தை ஊகித்தறிய முற்பட்ட பண்டையகால இந்தியத் தத்துவங்கள், குறிப்பாக உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்ட வேதாந்தத் தத்துவங்கள், அதனை பிரம்மம் என வரையறுத்தன. இப்பிரம்மத்தின் பரிணாம வளர்ச்சியே இவ்வுலகம்… Continue reading துறவும் இடமும்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சில வருடங்களுக்கு முன்பு அலுவலகத்தின் ஆண்டு முடிவு கொண்டாட்டங்களுக்காக, ஒட்டு மொத்த அலுவலகமும் கண்ணை பசுமையில் நனைக்கும் ஒரு Resortல் கூடியிருந்தோம். ஒரு 500 நபர்களுக்கு மேல் கலந்து கொண்ட நிகழ்வது. கும்பல் கும்பல்களாக அங்கு பரந்திருந்த பசும்புல் மேடுகள் மேல் புரண்டு கொண்டிருந்தனர். எந்நேரமும் மழை வரலாம் என்பதற்கான குளிர் காற்று இதனை ஏதுவாக்கியிருந்து. ஆனால் ஒரு சில பெண்கள் மட்டுமே கொண்ட கும்பல், அந்த மேட்டிலிருந்து தவ்வி வரவிருக்கும் மழையை முதன் முதலாக தொட்டு… Continue reading சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்