ஔரங்கசீப்-வெறுப்பிலெழும் தனிமை

இருண்ட அந்த குளிரூட்டப்பட்ட அரங்கின், கீழிருந்த மேடையின் கூரை விளக்கொன்று மொட்டவிழ்ந்து பூ மலர்வது போல மிக மெதுவாக உயிர்பெறுகிறது. அந்த விளக்கின் மங்கிய மஞ்சள் நிற வட்டவடிவ ஒளி இருளில் அம்மேடையில் தொழுது கொண்டிருந்த வயதான ஔரங்கசீப்பை அவ்வரங்கிலிருந்த பார்வையாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது. அச்சதுர வடிவான மேடையின் நட்டநடுவில் விழுந்திருந்த அந்தச் சிறு வட்டவடிவ ஒளியைத்தவிர,  மேடையின் பிற பகுதிகளும், பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியும் நிசப்தமான இருளில் இருந்தது. நபிகள்தான் ஔரங்கசீப்பின் இருளைப்போக்க அவ்வெளிச்சத்தை அனுப்பியிருக்கிறாரோ… Continue reading ஔரங்கசீப்-வெறுப்பிலெழும் தனிமை

Advertisement

வர்க்க சமூகங்கள் வழியாக ஒரு பயணம்

நாகரீக வளர்ச்சிக்கும் உடலுழைப்புக்குள்ளும் உள்ள தொடர்பை பற்றி புரிந்து கொள்வதற்காக எழுதும் ஒரு பதிவிது. வழக்கம் போல் நான் இதுவரை தெரிந்து வைத்திருக்கும் மார்க்ஸியத்தைத் தான் இதற்கு துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது. உடனே இது தீவிர கருத்துமுதல்வாதிகளுக்கு அல்லது தற்போதைய சமூகத்தின் வர்க்கப் பிரிவினை இயற்கையானது அல்லது இயல்பானது என்று எண்ணுவோருக்கு அல்லது முதலாளித்துவத்திற்கு எதிரான பதிவென்று எண்ண வேண்டாம். மூன்று சமூக அமைப்புகள் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் கடந்த, நிகழ் மற்றும் எதிர்கால சமூகங்களை முறையே… Continue reading வர்க்க சமூகங்கள் வழியாக ஒரு பயணம்

தமிழும் தத்துவமும்

தமிழ் சமூகத்திடமிருந்து இவ்வுலகுக்கு வழங்கப்பட்ட தத்துவம் ஏதும் உண்டா? என்ற கேள்வி தத்துவங்களின்மேல் சமீபகாலமாக  மோகம் கொண்டதிலிருந்தே அலைக்கழிக்கும் ஒன்று. பெரும்பாலும் தத்துவங்களின் அறிமுகம் தத்துவவியல் பயில்பவர்களைத் தாண்டி இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமே உள்ளது. அதிலும் வணிக எழுத்துக்களைத் தாண்டி வாசிக்கும் இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமே இந்த அறிமுகம்கூட சாத்தியம். பெரும்பாலும் தத்துவங்களைப் பயிற்றுவிக்கும் அனைத்து அமைப்புகளுமே நவீனத்தின் பெயரால் சிதைக்கப்பட்டு, இன்று எஞ்சியிருப்பவை அத்தத்துவங்களை குறியீடாகக் கொண்ட சடங்குகளை உயர்த்திப் பிடிக்கும் அமைப்புகள் மட்டுமே. ஏன்… Continue reading தமிழும் தத்துவமும்