சோர்பா என்ற கிரேக்கன்

சமீபத்தில் இரா.குப்புசாமி அவர்கள் எழுதிய வால்டேர் என்ற புத்தகத்தில் ஒரு சுவாரஸ்யமான குறிப்பு ஒன்று இருந்தது. ரூஸோ, மனிதனை அசுத்தப்படுத்துவது கலையும், விஞ்ஞானமும் தான் என்ற தன்னுடைய இயற்கைவாதம் (The Naturalism)பற்றிய புத்தகத்தை   ஃபிரெஞ்ச் தத்துவ அறிஞரும், இலக்கியவாதியுமான வால்டேரிடம் தருகிறார். கொஞ்சம் வாய்த்துடுக்கு கொண்ட வால்டேர், "நான் மீண்டும் நான்கு கைகளால் தவழ விரும்பவில்லை" என்கிறார். ஃபிரெஞ்ச் புரட்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் வால்டேர். சோர்பா நாவலில் வரும் கதைசொல்லியும், சோர்பா என்ற கதாபாத்திரமும்… Continue reading சோர்பா என்ற கிரேக்கன்

Advertisement

குதிரைமரம் – ஒரு நெசவு

நவீனக் கல்வியின் பலமாக நான் எண்ணுவது அது நமக்களிக்கும் ஒரு பொதுத்தன்மையை. குறிப்பாக, எந்த ஒன்றிலுமே ஆரம்பத்திலேயே பெரும் ஈடுபாட்டோடு தன்னையறியாமல் மூழ்கிப் போவதைத் தடுக்கிறது அல்லது தவிர்க்க வைக்கிறது. இதன் விழைவுதான் அந்த பொதுத் தன்மை என்றும் எண்ணுகிறேன். ஆற்றில் செல்லும் படகு அதன் சுழிக்குள் சிக்காமல் செல்வது போல.  உயர் கல்வியின் போது நம் அகத்தின் ஒத்திசைவுக்கேற்ப ஏதாவது ஒரு சுழியில் நம்மை மூழ்கடித்து அதில் நிபுணத்துவம் பெறும் முதிர்ச்சியைத் தருவது, ஆரம்பகட்ட கல்வியில்… Continue reading குதிரைமரம் – ஒரு நெசவு

பொன்னுலகம் – மரபும் நவீனமும்

மரபுக்கு திரும்புவோம் என்ற கூக்குரல் அதிகரித்திருக்கிறது. அப்படி என்றால் என்னவென்று கேட்கும் கூக்குரலும் ஒலிக்கிறது. பக்தி, மதம்,சாதிக்கு திரும்புவது தான் இது என்றும் அதற்கு பொதுப்படையாக பதிலளிக்கிறார்கள் இந்த திடீர் மரபுக் காதலர்கள். ஆனால் எப்போது நாம் இந்த பக்தி, மதம் மற்றும் சாதியை கைவிட்டோம். சாதியை வேண்டுமானால் சற்று மறைத்திருக்கலாம், ஆனால் இம்மூன்றையும் எக்காலத்திலும் நாம் கைவிட்டதில்லை. இந்த கூர் கத்தியை நவீனம் என்ற கைப்பிடி கொண்டு தான் உபயோகிக்கிறோம். அவர்கள் விடச்சொல்வது இந்த கைப்பிடியைத்தான்.… Continue reading பொன்னுலகம் – மரபும் நவீனமும்

நாளைய காந்தி

மலை உச்சியில் நின்று கொண்டு பார்த்த நகரத்தின் அசைவின்மையிலிருந்தெழுந்த அழகு, அதனை நெருங்கும் போது தொலைந்து நம்மை ஒரு விலக்கம் கொள்ளச் செய்கிறது. காந்தியை நெருங்கி அறிய முயலும் போது நமக்கு நடப்பதும் இதுவாகத் தான் இருக்குமோ என்று எண்ண வைக்கிறது எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் அவர்களுடைய 'நாளைய காந்தி' என்ற கட்டுரைத் தொகுப்பு. காந்திய ஆர்வலரும், காந்தி பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான இவர், இக்கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுவதும் இந்த விலக்கத்தைத்தானா என்று புரியவில்லை.… Continue reading நாளைய காந்தி

What a Dec it has been…

கண்ணில் ஏற்பட்ட சிறு குறைபாட்டில் இருந்து மீண்டு கொண்டிருப்பதால், வாசிப்பின் அடர்த்தி வெகுவாக குறைந்து போயிருந்தது. வாசிப்பு இல்லையென்றால் எங்கிருந்து எழுதுவது, எழுவது…? சமீபத்தில் நடந்த கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் வியனுலகு வதியும் பெருமலர் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிடுவதற்காக சென்னை வந்திருந்த எழுத்தாளர் ஜெமோவை (ஜெயமோகன்) நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எப்போதும் வாசகர்களால் சூழப்பட்டிருக்கும் தருணத்தில் மட்டுமே அவரை சந்திருத்திருந்த நான் அன்று அவரது அறையில் ஒரு சிலருடன்… Continue reading What a Dec it has been…

Notting Hill – An Art of story telling

பெண்களுக்கு பிடித்த நிறமாகச் சொல்லப்படும் பளீரென்ற இளஞ்சிவப்பு நிறச் சட்டை. எந்த மெனக்கெடலும் இல்லாமல், அதோடு எளிதாகப் பொருந்திப் போகும் கருப்பு நிற பேண்ட் மற்றும் கோர்ட். கன்னங்கள் சற்று ஒடுங்கி உள்வாங்கி, நாடியாய் நீண்ட உறுதியான சிவந்த அந்த பளிச் முகம், அவன் அணிந்திருக்கும் சட்டையை மட்டுமல்ல அவன் முன் நிற்கும் பெண்களையும் சற்று நாண வைக்கும். அப்படி நாணிய ஒரு பெண்ணின் அழைப்பை ஏற்று அவள் தங்கியிருக்கும் உயர்தர ஹோட்டலுக்குச் செல்கிறான். துரதிர்ஷ்டவசமாய், அவளால்… Continue reading Notting Hill – An Art of story telling

கவிஞனின் நிலையாமை

பிரபஞ்ச ஒழுங்கு / ஒழுங்கின்மைபற்றிப் பேசுவதும் நீண்டு விட்டது. கலைஞர்களில் பெரும்பாலோர் இதுபோல பிரபஞ்ச ஒழுங்கின்மைக்குப் பலியாவதும் இயல்புதான். சித்தர்களும் சாதுக்களும் பிரபஞ்ச ஒழுங்கின் பக்கம் இருப்பதும் நியதிதான். சராசரி மனுஷர்கள் இப்படியும் அப்படியும் இருக்கிறார்கள் அல்லது ஒன்றில் நிலைகொள்கிறார்கள்.விக்ரமாதித்யன் அவர்களின் இந்த வரிகளைப் படித்ததும் ஒழுங்கு என்ற ஒன்று இருப்பதை பற்றிய அறியாமை ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று போல் தெரிந்தது. அந்த பிரபஞ்ச ஒழுங்கில் நின்று கொண்டிருக்கும் சித்தர்களுக்கும் சாதுக்களுக்கும்  இந்த ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அவ்வளவு பெரிதாக பொருட்படுத்தப்… Continue reading கவிஞனின் நிலையாமை

நீட்சேவும் சாதியொழிப்பும்

மனிதர்களுடைய வாழ்வதற்கான விருப்புறுதி (The will to live) தான் இந்த உலகத்தை அதாக வடிவமைக்கிறது என்கிறார் சோப்பனோவர் என்ற ஜெர்மானிய தத்துவ அறிஞர். இவரிடமிருந்து தான் ஒரு படிமேல் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக அதே நாட்டைச் சேர்ந்த தத்துவ அறிஞரான நீட்சே வல்லமைக்கான விருப்புறுதியை (The will to power) கையிலெடுக்கிறார் என்கிறது இரா.குப்புசாமி அவர்கள் எழுதிய 'நீட்சே' என்கின்ற புத்தகம். ஹிட்லர் தனக்குத் தேவையான தத்துவ வலிமையை நீட்சேவிடமிருந்துதான் பெற்றுக் கொண்டார் என்ற கூடுதல்… Continue reading நீட்சேவும் சாதியொழிப்பும்

பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு

கருத்தியலின் கூர்மை, கத்தி போன்ற கூர்முனை கொண்ட ஆயுதத்திற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல என்கிறது ஜெயமோகன் அவர்களின் 'பின் தொடரும் குரலின் நிழல்' நாவல். ஸ்டாலினால், ரஷ்யாவில் ஏற்பட்ட அழிவுகளுக்கு அவர் முன்னெடுத்த 'அரசு முதன்மைவாதம்' தான் காரணம் என்று சோதிப்பிரகாசம் போன்ற மார்க்சிய அறிஞர்கள் குறிப்பிட்டாலும், ஸ்டாலின் அதை செயல்படுத்துவதற்கு தன் கையில் வைத்திருந்த கருத்தியல் மார்க்சியம் எனும்போது அதன் கூர்மை நமக்கு அச்சமூட்டுகிறது என்கிறார் ஜெயமோகன். மார்க்சியம் மட்டுமல்ல, எந்த கருத்தியலும் மேலும் மேலும்… Continue reading பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு

Maara – The Christ?

கருணையையும், அன்பையும் தன்னுள்ளிருந்து அள்ளியள்ளி இறைக்கிறார்கள் மாறாவும், அவனுக்கு சிறுவயதில் அடைக்கலம் தந்த வெள்ளையாவும். தனக்கு அளிக்கப்பட்ட அன்பை பன்மடங்கு பெருக்கி சுற்றியுள்ள அனைவருக்கும் அளிக்கிறான் மாறா. தன் தாயைப் போலவே, தன் உடலையும் மூலதனமாக்க முயலும் தந்தையிடமிருந்து காப்பற்றப்படும் பதின்ம வயது மகள்; 10 வயது சிறுமியை தன்னுடைய அதீத நம்பிக்கையால் கொன்று விட்டதால் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியில் தற்கொலைக்கு முயலும் பெண் மருத்துவர் என மந்தையிலிருந்து வழி தவறிய ஆடுகளை இரட்சிப்பவராக இருக்கிறார் மாறா.  இப்படி… Continue reading Maara – The Christ?