ரிதமும் பண்பாடும்

நடையில் ஒரு மெல்லிய துள்ளல் இருந்தது மீனாவிடம். பறக்க எத்தனித்து சற்று தூரம் மட்டுமே பறந்தடங்கும் கோழி போலிருந்த மனத்திற்கு, இன்று உண்மையான சிறகுகள் கிடைத்து விட்டது போலிருந்தது அந்த துள்ளல் நடை. அர்ஜூனை பார்த்து தன் காதலை வெளிப்படுத்தும் தெளிவைப் பெற்றதனால் வந்தது இந்த மென் துள்ளல். இருவருமே தங்கள் துணையை ஒரே ரயில் விபத்தில் இழந்தவர்கள். இது இயல்பாகவே ஒருவர் மேல் ஒருவர் ஈர்ப்பும், பச்சாதாபமும் கொள்வதற்கு காரணமாகிறது என்ற  மையச்சரடை ஒட்டி அருமையா… Continue reading ரிதமும் பண்பாடும்

Advertisement

பஞ்சபூதங்களும் முகவடிவாகும்

தன்னைத் தன் உணர்வுகளுக்கு ஏற்ப வெளிப்படுத்திக் கொள்ள முடியாத முகம்,  இயல்பாகவே ஒரு சோகத்தன்மையை கொண்டிருக்கிறது. சலங்கை ஒலியில் வரும் கமல் மற்றும் குறிப்பாக ஜெயப்பிரதாவின் முகங்கள் போல.  ஆனால், புறவுலத்தின் சீண்டல்கள் ஒரு எல்லையை மீறும்போது இயல்பாகவே கமலின் உருவத்தை எடுத்துக் கொண்ட அந்த நாட்டிய கலைஞனின் செருக்குணர்வு உடம்பு முழுவதும் முகமாய் மாறி வெளிப்படுகிறது. இடுப்பில் தன் இரு கைகளையும் அமர்த்தியவாறு, தன் வலக் காலணியை இடப்பக்கமும், இடக்காலணியை வலப்பக்கமும் உதறி வீசுவதில் ஆரம்பிக்கும்… Continue reading பஞ்சபூதங்களும் முகவடிவாகும்

பனிவிழும் இரவு

பதாகை இதழில் வெளிவந்த எனது முதல் சிறுகதை. https://padhaakai.com/2018/02/10/white-night/ அப்புகையை நோக்கியவாறு பொழிந்திருந்த பனியில் கால்புதைய நடந்தது, அணிந்திருந்த மூன்றடுக்கு உடை தக்க வைத்திருந்த வெப்பம் போதவில்லை என உணர்த்தியது. கொஞ்சம் வெப்பம் வேண்டி ஊரிலிருந்து எடுத்து வைத்திருந்த தங்க வடிப்பான் ஒன்றை கட்டில் இருந்து உருவி பற்ற வைத்துக் கொண்டேன். அவர்கள் மரக் கட்டைகளை எரித்து கனன்று கொண்டிருந்தார்கள். நான் என்னை எரித்து…

கனவும் சாத்தியமும்

2020ம் ஆண்டிற்கான குமரகுருபன்-விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் கவிஞர்களுக்கான விருதைப் பெற்ற வேணு வேட்ராயன் அவர்களுடைய கவிதைகள் பற்றிய சிறப்புரையின் காணொளியும் அதன் கட்டுரை வடிவமும். நிகழ்வு பற்றிய அறிவிப்பு: https://www.jeyamohan.in/166789/ அனைவருக்கும் வணக்கம். கவிஞர் குமரகுருபன் அவர்கள் நினைவாக வழங்கப்படும் இவ்விருது விழாவில், இந்த வாய்ப்பை எனக்களித்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு நன்றி.  இந்த வாய்ப்பு கிடைத்தபோது சற்றுத் தயங்கினேன். இன்னமும் , நான் கவிதைகளின் ஆரம்பகட்ட வாசகன் தான். படிமங்களுக்கு சிறகளித்து பறவை போல்… Continue reading கனவும் சாத்தியமும்

சோர்பா என்ற கிரேக்கன்

சமீபத்தில் இரா.குப்புசாமி அவர்கள் எழுதிய வால்டேர் என்ற புத்தகத்தில் ஒரு சுவாரஸ்யமான குறிப்பு ஒன்று இருந்தது. ரூஸோ, மனிதனை அசுத்தப்படுத்துவது கலையும், விஞ்ஞானமும் தான் என்ற தன்னுடைய இயற்கைவாதம் (The Naturalism)பற்றிய புத்தகத்தை   ஃபிரெஞ்ச் தத்துவ அறிஞரும், இலக்கியவாதியுமான வால்டேரிடம் தருகிறார். கொஞ்சம் வாய்த்துடுக்கு கொண்ட வால்டேர், "நான் மீண்டும் நான்கு கைகளால் தவழ விரும்பவில்லை" என்கிறார். ஃபிரெஞ்ச் புரட்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் வால்டேர். சோர்பா நாவலில் வரும் கதைசொல்லியும், சோர்பா என்ற கதாபாத்திரமும்… Continue reading சோர்பா என்ற கிரேக்கன்

குதிரைமரம் – ஒரு நெசவு

நவீனக் கல்வியின் பலமாக நான் எண்ணுவது அது நமக்களிக்கும் ஒரு பொதுத்தன்மையை. குறிப்பாக, எந்த ஒன்றிலுமே ஆரம்பத்திலேயே பெரும் ஈடுபாட்டோடு தன்னையறியாமல் மூழ்கிப் போவதைத் தடுக்கிறது அல்லது தவிர்க்க வைக்கிறது. இதன் விழைவுதான் அந்த பொதுத் தன்மை என்றும் எண்ணுகிறேன். ஆற்றில் செல்லும் படகு அதன் சுழிக்குள் சிக்காமல் செல்வது போல.  உயர் கல்வியின் போது நம் அகத்தின் ஒத்திசைவுக்கேற்ப ஏதாவது ஒரு சுழியில் நம்மை மூழ்கடித்து அதில் நிபுணத்துவம் பெறும் முதிர்ச்சியைத் தருவது, ஆரம்பகட்ட கல்வியில்… Continue reading குதிரைமரம் – ஒரு நெசவு

பொன்னுலகம் – மரபும் நவீனமும்

மரபுக்கு திரும்புவோம் என்ற கூக்குரல் அதிகரித்திருக்கிறது. அப்படி என்றால் என்னவென்று கேட்கும் கூக்குரலும் ஒலிக்கிறது. பக்தி, மதம்,சாதிக்கு திரும்புவது தான் இது என்றும் அதற்கு பொதுப்படையாக பதிலளிக்கிறார்கள் இந்த திடீர் மரபுக் காதலர்கள். ஆனால் எப்போது நாம் இந்த பக்தி, மதம் மற்றும் சாதியை கைவிட்டோம். சாதியை வேண்டுமானால் சற்று மறைத்திருக்கலாம், ஆனால் இம்மூன்றையும் எக்காலத்திலும் நாம் கைவிட்டதில்லை. இந்த கூர் கத்தியை நவீனம் என்ற கைப்பிடி கொண்டு தான் உபயோகிக்கிறோம். அவர்கள் விடச்சொல்வது இந்த கைப்பிடியைத்தான்.… Continue reading பொன்னுலகம் – மரபும் நவீனமும்

நாளைய காந்தி

மலை உச்சியில் நின்று கொண்டு பார்த்த நகரத்தின் அசைவின்மையிலிருந்தெழுந்த அழகு, அதனை நெருங்கும் போது தொலைந்து நம்மை ஒரு விலக்கம் கொள்ளச் செய்கிறது. காந்தியை நெருங்கி அறிய முயலும் போது நமக்கு நடப்பதும் இதுவாகத் தான் இருக்குமோ என்று எண்ண வைக்கிறது எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் அவர்களுடைய 'நாளைய காந்தி' என்ற கட்டுரைத் தொகுப்பு. காந்திய ஆர்வலரும், காந்தி பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான இவர், இக்கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுவதும் இந்த விலக்கத்தைத்தானா என்று புரியவில்லை.… Continue reading நாளைய காந்தி

What a Dec it has been…

கண்ணில் ஏற்பட்ட சிறு குறைபாட்டில் இருந்து மீண்டு கொண்டிருப்பதால், வாசிப்பின் அடர்த்தி வெகுவாக குறைந்து போயிருந்தது. வாசிப்பு இல்லையென்றால் எங்கிருந்து எழுதுவது, எழுவது…? சமீபத்தில் நடந்த கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் வியனுலகு வதியும் பெருமலர் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிடுவதற்காக சென்னை வந்திருந்த எழுத்தாளர் ஜெமோவை (ஜெயமோகன்) நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எப்போதும் வாசகர்களால் சூழப்பட்டிருக்கும் தருணத்தில் மட்டுமே அவரை சந்திருத்திருந்த நான் அன்று அவரது அறையில் ஒரு சிலருடன்… Continue reading What a Dec it has been…

Notting Hill – An Art of story telling

பெண்களுக்கு பிடித்த நிறமாகச் சொல்லப்படும் பளீரென்ற இளஞ்சிவப்பு நிறச் சட்டை. எந்த மெனக்கெடலும் இல்லாமல், அதோடு எளிதாகப் பொருந்திப் போகும் கருப்பு நிற பேண்ட் மற்றும் கோர்ட். கன்னங்கள் சற்று ஒடுங்கி உள்வாங்கி, நாடியாய் நீண்ட உறுதியான சிவந்த அந்த பளிச் முகம், அவன் அணிந்திருக்கும் சட்டையை மட்டுமல்ல அவன் முன் நிற்கும் பெண்களையும் சற்று நாண வைக்கும். அப்படி நாணிய ஒரு பெண்ணின் அழைப்பை ஏற்று அவள் தங்கியிருக்கும் உயர்தர ஹோட்டலுக்குச் செல்கிறான். துரதிர்ஷ்டவசமாய், அவளால்… Continue reading Notting Hill – An Art of story telling