யாக்கை நாவல் பற்றி

சிலவற்றை அல்லது இந்நாவலில் சித்தரிக்கப்படும் சுப்பு (சுப்ரமணியன்) போன்றவர்களின் மனநிலையை, ஏற்கனவே நமக்கு வரையறுத்துக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடிவதில்லை. கலையை, தர்க்கத்தை மட்டுமே கொண்டு புரிந்து கொள்ள முடியாது என்பதும் நிதர்சனம் தான். இந்த கலைமனத்தின் நிறைவின்மையின் ஊற்றுக்கண் என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை நோக்கித்தான் தர்க்கபுத்தி இயங்கும். சுப்புவின் துயர் மிகுந்த பால்யமும், அங்கிருந்து அவனுக்கு கிடைக்கும் சமூகம் மற்றும் பாலியல் பற்றிய புரிதல்களும் இந்நாவலில் சித்தரிக்கப்படும் விதம் அலாதியானது. வாசகர்களை இயல்பாக… Continue reading யாக்கை நாவல் பற்றி

சுதந்திரமும் அரசாங்கமும்

சில புத்தகங்கள், திடீரென இதுவரையிலான வாசிப்பை, அதன் வழி அடைந்த சில புரிதல்களை உடனடியாக தொகுத்து கொள்ள வேண்டிய அவசியத்தை அல்லது நிர்பந்தத்தை ஏற்படுத்தும். எஸ்.நீலகண்டன் அவர்களின் இப்புத்தகம் பொருளியல் என்பது அறிவியல் மற்றும் பிற அறிவுத்துறைகள் போல நவீன யுகத்தின் கண்டுபிடிப்பு என்ற பொதுப்புரிதலை இல்லாமலாக்குகிறது. வரவு செலவுகளை துல்லியமாக கணக்கிட உதவும் Double entry book keeping system (வரவும் செலவும் should net to zero என்ற Accountingன் பாலபாடம்)  நவீன யுகத்திற்கு… Continue reading சுதந்திரமும் அரசாங்கமும்

What went wrong with CAPITALISM

எதற்கு இந்த புத்தகத்தை எடுத்தேன் என்பதை தோராயமாக மட்டுமே சொல்ல முடியும். முதலாளித்துவம் சரிவை நோக்கிச் செல்கிறது என்ற Narrative சமீப காலமாக Grand Narrative ஆக மாற ஆரம்பித்ததால் இருக்கலாம். 'What Went Wrong with CAPITALISM' என்ற தலைப்பு இயல்பாகவை இப்புத்தகத்தை வாங்க வைத்தது. இதை எழுதியவரைப் பற்றி பிறகுதான் google செய்து தெரிந்து கொண்டேன். Ruchir Sharma's profile also compelled me to take this book. https://ruchirsharma.com/ இன்னமும் புத்தகத்திற்குள்ளேயே… Continue reading What went wrong with CAPITALISM

தாகூரின் ஜப்பான் பயணம்

கூடையை நிறைத்திருக்கும் ஆரஞ்சு பழங்களுக்கு மத்தியில் ஆங்காங்கே இருக்கும் ஆப்பிள்கள் நம் கவனத்தை ஈர்ப்பவை. ஆனால், கண்ணை உறுத்தாத ஓர் ஓர்மையும் அழகும் கொண்டவையா என்பது, அந்த கூடையின் நிறம், அது வைக்கப்பட்டிருக்கும் இடம், பார்ப்பவரின் அப்போதைய மனநிலை, அவருடைய இயல்பு என நிறைய காரணிகளைப் பொறுத்துள்ளது. தன்னுடைய ஜப்பானிய பயணத்தை தாகூர் விவரிக்கும் விதம் அலாதியானது. கடலைகளின் நிலையாமையையும், அதில் கலக்கும் நதிகளின் நெகிழ்வையும், நிலத்தின் இறுக்கத்தையும் கொண்டிருக்கிறது. காற்றும், வானமும் தொடர்ந்து முயங்குகின்றன. இவ்விவரணைகள்… Continue reading தாகூரின் ஜப்பான் பயணம்

நிலமெல்லாம் ரத்தம்

தன் மூதாதையர் வாழ்ந்த நிலப்பரப்பின் மேல் கொண்டுள்ள பற்று இத்தனை தலைமுறைகளாக ஒரு சமூகத்தால் எப்படி தக்க வைத்துக் கொள்ளப்பட முடிகிறது என்ற ஆச்சரியத்தை விளக்க முற்படுகிறது இப்புத்தகம். உலகெங்கும் பரவி, தங்களுடைய அறிவாற்றலால் தனக்கென மரியாதைக்குரிய இடத்தை (பிரிட்டிஷ் பிரதமராகவும் ஒரு யூதர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்) அடைந்த பின்பும் கூட, எது யூதர்களை அமைதியிழக்கச் செய்திருக்கும் என்பது அவர்களுடைய வரலாறு மற்றும் பண்பாடுகளிலிருந்து விலகி நின்று பார்ப்பவர்களுக்கு எப்போதுமே  புதிர் தான். இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையை,… Continue reading நிலமெல்லாம் ரத்தம்

இருத்தலியம் – சில புரிதல்களும் குழப்பங்களும்

தனிமனிதன், அனைத்தையும் விட மிக முக்கியமாக கருதப்படுவது, மதத்திலிருந்து விலகி அறிவியல் அடிப்படையில் அமைந்த நவீனயுகத்தில் தான் என்ற பொதுப்புரிதலை சற்று குலைத்திருக்கிறது இருத்தலியத்தின் வேர்களை தேட முயலும் இப்புத்தகம். சமூகத்தின் அடிப்படை அலகு தனிமனிதன் என்று பகுத்திருக்கும் இந்த நவீன யுகம், நான் இச்சமூகத்தின் விளைவல்ல; இச்சமூகம் தான் என்னுடைய விளைவு என்று அத்தனிமனிதனை அறைகூவச் செய்கிறது. பகுத்தறிவுக்கு முந்திய மதக் காலத்திலும்,  இக்குரல் வலுவாக ஒலித்திருக்கும் என்பதை கீர்கேகார்ட் (Søren KierkegaardDanish theologian and… Continue reading இருத்தலியம் – சில புரிதல்களும் குழப்பங்களும்

சுதந்திரமும் நம்பிக்கையும்

இடமும் காலமும்: மொட்டை மாடியில் காய்ந்திருந்த துணிகள் எங்களுக்காக காத்திருந்தன.வெயில் தணிந்திருந்த மாலைக் காற்றில் அசைந்தவாறே, மொட்டை மாடியின் சுவர்களை நோக்கி ஊஞ்சலாடிக் கொண்டிருந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த கிளிகளை ரசித்துக் கொண்டிருந்தது. ( நாங்களும் அதன் ரசிப்பில் இணைந்து கொண்டோம். முகத்தை வருடிய மென்காற்று வெப்பத்தை முழுதுமாக உதிர்த்திருந்தது, எங்களது ரசிப்பை நீண்ட நேரத்திற்கு நீட்டித்தது. ) Me: கிளி மாதிரி சத்தம் கேக்குது…எங்க இருக்குனு தெரியலயே… My wife: (சுவற்றை நோக்கி ஆடிக் கொண்டிருந்த… Continue reading சுதந்திரமும் நம்பிக்கையும்

Basic AI

இப்புத்தகத்தை வாசிக்கையில் இயக்குநர் சங்கரின் எந்திரன் படமும், எழுத்தாளர் ஜெயமோகனால் உருவாக்கப் பட்டிருக்கும் முழுமையறிவு என்ற அமைப்பும் நினைவில் வந்து கொண்டே இருந்தது.  இப்புத்தக ஆசிரியர் சொல்வதைப் போல இப்புத்தகம் நமக்கொரு  Unguarded Lion Safari (சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது?)  தான். தொலைவிலுள்ள எரிமலைகளை பாதுகாப்பான கண்ணாடி கூண்டுக்குள் இருந்து பார்ப்பதை விட, முடிந்த அளவு அதனருகில் சென்று அதன் தீவிரத்தை உணரவைக்கும் ஒரு முயற்சி இப்புத்தகம் எனலாம். வெம்மையின் தீவிரத்தை உணர்ந்தால், அதிலிருந்து மீள்வதற்கு… Continue reading Basic AI

நானும் AIயும்

Me: சிங்கம் தன்னை கண்ணாடில பார்த்தா என்ன நினைக்கும்? அறிவாளி: அத இன்னொரு சிங்கம்னு நினைக்கும். முட்டாள் சிங்கங்கள். ஞானி: சிங்கம் முட்டாளல்ல. அது தான் இயற்கையின் ஞானம். அறிவாளி: ப்ச்ச்…போச்சுடா…இந்த மாதிரி கேள்விய கேட்டவுடனே எப்படித்தான் உங்களுக்கு மூக்கு வேர்க்குதுன்னு தெரியல ஞானி… Me: அப்ப கண்ணாடில இருக்குறது நான் தான்னு உணர்ர மனுஷன் முட்டாளா? அறிவாளி: (சற்று எரிச்சலுடன்) ஞானி, this is for you… ஞானி: (உற்சாகத்துடன்) கண்ணாடில இருக்குறது தன் பிம்பம்னு… Continue reading நானும் AIயும்