ஒரு சிறுகதையும் வாசிப்பும்

வாசிப்பு ஏன் இவ்வளவு கஷ்டமாக உள்ளது? காட்சி ஊடகங்களைப் போலில்லாமல் வாசிப்பிற்கு கொஞ்சம் மெனக்கெடல் தேவை என்பதாலா? இல்லை, கொஞ்சம் கற்பனை தேவை என்பதாலா? இவ்விரண்டையும் விட எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று அகப்பையில் ஒட்டிக்கொண்டிருக்கும் கடைசி சொட்டு ஆர்வத்தையும் வடிந்து விடச் செய்கின்றனவா?. பெரும்பாலும் சுவாரஸ்யமின்மையே நம்மை வாசிப்பிலிருந்து விலக்கி வைக்கிறது எனலாம்.   இந்த சுவாரஸ்யம் எழுதுபவனால் மட்டுமே உருவாக்கப்படுவதில்லை. வாசகனின் மெனக்கெடலும் கற்பனையும் அதற்கு மிக அவசியம். ஒரே கதை தான், ஆனால் வாசிப்பவர்களின் அனுபவங்களைப்… Continue reading ஒரு சிறுகதையும் வாசிப்பும்

Advertisement

ஸ்கெட்ச் – ஒரு மெனக்கெடல்

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஸ்கெட்ச் போட்டு விக்ரமையும் தமன்னாவையும் சினிமாத்துறையிலிருந்து தூக்குவதற்கு திட்டம் தீட்டியிருக்கிறார்கள். விக்ரம் எப்போதும் ஒரு மெனக்கெடல்களின் மனிதர். அவர் பெயரைக் கேட்டவுடன் கண்முன் வரும் அந்த உழைப்பு தான் அவர் படங்களுக்கான ஈர்ப்பு. ஆனால் சென்ற வேகத்திலேயே சுவற்றிலடித்த பந்தாய் நம்மை  திரை அரங்கத்தை விட்டு வெளியேற வைக்கின்றன, அவருடைய சமீபத்திய படங்கள். ஸ்கெட்சும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் இன்னும் இளமையாய் தான் இருக்கிறேன் என்றுணற்துவதற்காகவே  வேறு எந்தவிதமான மெனக்கெடல்களும் இல்லாத… Continue reading ஸ்கெட்ச் – ஒரு மெனக்கெடல்

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நாள்

சமீபத்தில் என் ஆதர்ச எழுத்தாளர் ஜெமோ (ஜெயமோகன்) சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டுக்காக வந்தபோது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அச்சந்திப்பு பற்றி அவருக்கெழுதிய கடிதம் இது. ஜெமோ, மீண்டுமொரு படபடப்பு தொற்றிக் கொண்டது.  இரண்டாவது முறையாக உங்களை நேரில் சந்திக்கப்போவதை நினைத்து. முதல் தடவை குமரகுருபனின் நினைவு விருது விழாவில். இப்போது உங்கள் ஓவிய (ஓவியமான அல்ல) நண்பர் சீனிவாச நடராஐனின் ‘அச்சப்பட தேவையில்லை’ நூல் வெளியீட்டு விழாவில். ஆனால் முதல்தடவை போல் எனது… Continue reading எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நாள்

2018 – பயணங்களும் இலக்குகளும்

“எதுக்கு வேணாலும் தரகர் வச்சுக்கலாம்டா...ஆனா...காதலுக்கு மட்டும் கூடவே கூடாது மாப்ள….” கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு மின்சாரகனவை பார்த்தபோது கிடைத்த ஞானம். ஆனால் சமீபத்தில் மீண்டும் பார்த்தபோது கிடைத்த ஞானமே வேறு. இருக்காதா பின்ன...எலக்கியம்லாம் இப்ப நிறைய படிக்கிறோம்ல..   கடவுளைத் தேடிய பயணத்தில் கஜோல் கண்டடைந்தது தன் காதலை. காதலைத் தேடிய பயணத்தில் அரவிந்த்சாமி கண்டடைந்தது கடவுளை.   ஹெகல் போன்ற மேலை நாட்டுத் தத்துவ ஞானிகளையும்; புத்தர், ஆதி சங்கரர் போன்ற கீழை நாட்டு… Continue reading 2018 – பயணங்களும் இலக்குகளும்