இராவணனுக்கு மட்டுமா பத்து தலை. ஆசையிலிருந்து பேராசையென; அகந்தையிலிருந்து ஆணவமென; பொன்னாசையிலிருந்து பெண்ணாசையென; அடைக்கலத்திலிருந்து ஆதிக்கமென; தனியுடைமையிலிருந்து தனக்கு மட்டுமேயென முடிவில்லாமல் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது நம்மைத் தளைப்படுத்தும் நம்முடைய தலைகள். யுத்த களத்தில் இராவணனின் தலைகள் ஒவ்வொன்றாக கொய்யப்படும் பொழுது, பற்று அற்றவனென, எளியவனென, பொதுவுடைமைவாதியென மிளிர ஆரம்பிக்கின்றான் இராவணன். தன்னைத் தளைப்படுத்திய அனைத்து தலைகளையும் களைந்து பொன்னொளி வீசுகிறது எஞ்சியிருக்கும் அவனுடய முகம். குழந்தையின் முகம். அது குழந்தையின் அகமும் கூட. இப்படித்தான்… Continue reading ‘காலா’- இராவண வதம்