தனித்தமிழும் தாய்மொழிப் பற்றும்

பகுத்தறிவின் எல்லைகளைச் சுட்டிக் காட்டி மாறாத உண்மை என்று எதுவுமில்லை என்று சொல்ல வந்த "பகுத்தறிவுப் பயங்கரங்கள்" என்ற பின்நவீனத்துவ (Post Modern) சிந்தனையை சாக்காக வைத்துக் கொண்டு மரபுகளோடு கட்டிப்புடி வைத்தியம் செய்து கொண்ட ஒரு கூட்டம் உருவானது உலகெங்கும். இங்கே தமிழகத்தில் உருவான அக்கூட்டத்தின் பதாகை சுதந்திர போராட்ட காலத்தில் கருக்கொண்ட ‘தனித்தமிழ்’ எனும் இயக்கத்திலிருந்து உருவான ‘தமிழ்தேசியம்’. ‘எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம் ‘ என்ற தலைப்பிட்ட ராஜ் கௌதமன் அவர்களின் இக்கட்டுரைத் தொகுப்பு… Continue reading தனித்தமிழும் தாய்மொழிப் பற்றும்

Advertisement

விடைபெறுகிறேன் உடன்பிறப்புக்களே

மாநில சுயாட்சிக்காக; சமூக நீதிக்காக; வெற்றுச் சிந்தாந்தங்களுக்கு எதிராக;தாய்மொழிப் பற்றிற்காக; தமிழ் மொழிக்காக; கொண்ட கொள்கைகளுக்காக என தமிழகத்தில் இருந்து கொண்டிருந்த கடைசிக் குரலும் தன் சத்தத்தை ஒட்டு மொத்தமாக நிறுத்திக் கொண்டிருக்கிறது. “ஓடினான்...ஓடினான்...வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்”...எதற்காக ஓடினான். தன் சுயத்தின் மேல் கொண்ட அபார நம்பிக்கைகாக. என்னால் இத்தமிழகத்தை வழிநடத்த முடியும் என்பதற்காக. என்னால் தமிழ் உள்ளங்களை என் தமிழாற்றலால் வெல்ல முடியும் என்பதற்காக. என்னால் அம்பேத்கரும் பெரியாரும் கனவு கண்ட சமூக நீதியை தமிழகத்தில்… Continue reading விடைபெறுகிறேன் உடன்பிறப்புக்களே

காலியான கண்ணாடிப்பேழை

சாய்வாக ராஜாஜி கூடத்தின் படிக்கட்டுகளில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது அந்த கண்ணாடிப்பேழை. தனக்கேயுரிய அழகோடு அந்த கறுப்புக் கண்ணாடி மலர்ந்து உறைந்திருக்கும் இந்த சூரியனின் கண்களை திகைப்போடும் துயரோடும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. தோளில் எப்போதுமிருக்கும் மஞ்சளாடை அந்த சூரியன் உதிக்கும் மலை போன்ற தோள்களை அதே காதலுடன் ஆரத்தழுவியிருக்கிறது. தமிழ்த்தாயின் மூத்தமகனை மார்பிலிருந்து கால்வரை போத்தியிருக்கிறது தேசியக் கொடி. சுவாசித்திருக்கும் போது அனைத்து தலைவர்களுக்கும் ஒன்றுதான். சுவாசம் நிற்கும்போதுதான் அத்தலைவர் எவ்வளவு பெரிய ஆளுமை என்று தெரியவருகிறது.… Continue reading காலியான கண்ணாடிப்பேழை

மழைமாலைப் பொழுது

பக்கவாட்டில், பளிச்...பளிச்..என தொடுவான மின்னல் விட்டு விட்டு கருமேகங்களை துளைத்து வெட்டிச் சீரான இடைவெளியில் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. ஆங்காங்கே இருந்த, பூசிய வெள்ளை வர்ணம் மங்கிய, நாற்கரசாலைத் திட்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த சிமெண்ட் வீடுகளை போர்த்தியிருந்தன கருமேகங்கள். மங்கிய அந்த வெள்ளை வர்ண வீடுகளையும் பளிச்சென காட்டியது அக்கருமேகங்கள். எந்நேரத்திலும் தன் எடை தாழாமல் பிய்த்துக் கொள்ளும் நிலையிலிருந்த, சூல்கொண்ட அம்மேகங்களின் தவிப்பை பயணித்துக் கொண்டிருந்த வண்டியின் கண்ணாடி வழியே உணர்ந்தவனாய், தோளில் சாய்ந்திருந்த மனைவியின்… Continue reading மழைமாலைப் பொழுது