A week end evening at ITC Grand Chola

வருடமொரு முறை நடக்கும் பெருநிகழ்விது. இம்முறை சோழர்கால கட்டிடக்கலையையொட்டி வடிவமைக்கப்பட்டிருக்கும் ITC நிறுவனத்திற்குச் சொந்தமான நட்சத்திர விடுதியில் இரைச்சலும் கும்மாளமும் வியர்வையும் அயர்ச்சியும் ஆச்சரியமுமாக நடந்து முடிந்தது. ஒட்டுமொத்த ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தாரோடு ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்து மூச்சுமுட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மிகச் சிக்கலான வேலை. பெரும்பாலும் திறந்தவெளிகளிலேயே நடத்தப்படும் இந்நிகழ்வு இம்முறை தரத்திற்கு பெயர்போன ITCன் உள்ளரங்கத்தில். 5.30 மணி நிகழ்வுக்கு வீட்டிலிருந்து கிளம்பியபோது மணி மாலை 6ஐத் தொட்டிருந்தது. வழக்கமாக… Continue reading A week end evening at ITC Grand Chola

Advertisement

டால்ஸ்டாய் கைவிட்ட டால்ஸ்டாய்

https://youtu.be/21Q_4mQG5TI ஒன்றைப் பற்றி எழுதிவிட்டு உடனே அதைப் படிக்கும் வாசகன் அதன்படி அவனை மாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணுவது மிக மடத்தானமது. டால்ஸ்டாயும் இந்த மடத்தனத்தைத்தான் செய்தார் என்று சென்னையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய டால்ஸ்டாயின் 190வது பிறந்த நாளில் பேருரையாற்றிய ஜெமோ ( எழுத்தாளர் ஜெயமோகன்) சுட்டிக்காட்டினார். ரஷ்ய பேரிலக்கியத்தில் நீங்கா இடம்பெற்று அதன் வழியாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட கொண்டாடப்பட்டு வருகிற இலக்கிய ஆளுமையான டால்ஸ்டாயை… Continue reading டால்ஸ்டாய் கைவிட்ட டால்ஸ்டாய்

வாலியின் அவதார வரிகள்

**ஓடை நீரோடை இந்த உலகம் அது போல ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே….** வாலியின் இந்த அவதார வரிகள், உலகத்தின் கால ஓட்டத்தை ஓடையின் நீரோட்டத்தோடு ஒப்பிட்டு, நம் மனதையும் நினைவுகளின் ஓட்டமாக உருவகித்திருக்கிறது. மனதென்னும் நீரோடையில் ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகள் நிலையற்றவை. உலகம் அதன் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் காலத்தின் சாட்சியென்றால், மனம் அதன் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகளின் சாட்சி மட்டுமே. அகத்தையும் புறத்தையும் இணைக்கும் குறுந்தொகை… Continue reading வாலியின் அவதார வரிகள்

படைப்பும் கல்வியும்

https://youtu.be/rg7SzQxipC8 இளையராஜா அவர்களின் 75வது பிறந்தநாளையொட்டி, MOP வைஷ்ணவா பெண்கள் கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்வின் காணொளிப்பதிவிது. எந்த அசல் கலைஞனுமே தனக்கு தெரியாதவற்றைத்தான் செய்கிறான். 'அது' செய்யப்படும் வரை அவன் அறிதலில் 'அது' இல்லை. திருக்குறளை திருவள்ளுவர் தெரிந்து கொண்டா எழுதினார்? அதுபோலத்தான் என் இசையும் என்று படைப்பாளி என்பவன் யார் என்று இக்கல்லூரி மாணவிகளுக்கு உணர்த்த முயன்றிருக்கிறார் இசையின் ராஜா. வெற்றிடத்தில் இருந்துதான் எதுவுமே உருவாக முடியும்; அறியாமையில் இருந்துதான் அறிதலை உணரமுடியும் என்ற இந்த… Continue reading படைப்பும் கல்வியும்