மாநில சுயாட்சிக்காக; சமூக நீதிக்காக; வெற்றுச் சிந்தாந்தங்களுக்கு எதிராக;தாய்மொழிப் பற்றிற்காக; தமிழ் மொழிக்காக; கொண்ட கொள்கைகளுக்காக என தமிழகத்தில் இருந்து கொண்டிருந்த கடைசிக் குரலும் தன் சத்தத்தை ஒட்டு மொத்தமாக நிறுத்திக் கொண்டிருக்கிறது.
“ஓடினான்…ஓடினான்…வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்”…எதற்காக ஓடினான். தன் சுயத்தின் மேல் கொண்ட அபார நம்பிக்கைகாக. என்னால் இத்தமிழகத்தை வழிநடத்த முடியும் என்பதற்காக. என்னால் தமிழ் உள்ளங்களை என் தமிழாற்றலால் வெல்ல முடியும் என்பதற்காக. என்னால் அம்பேத்கரும் பெரியாரும் கனவு கண்ட சமூக நீதியை தமிழகத்தில் மெய்யாக்கி காட்ட முடியும் என்பதற்காக.
இன்று ஓடிய கால்கள் தழன்று, சிங்கத் தமிழ்க் குரல் அடங்கி, தோல் சுருங்கி உடல் சிறுத்ததால் அந்த தன்னிகரற்ற தமிழ்த்தாய் மகனின் அபார சுயம் நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறது.
வளர்க தமிழகம் அந்த சுயத்தைப் பெற்று…..