மீண்டுமொரு இளைப்பாறல்

அடுக்கி வைக்கப்பட்ட ஒன்றை கலைத்துக் போடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. பெரும்பாலான விளையாட்டுகள்  இந்த உளவியலின் அடிப்படையில் தான் வடிவமைக்கப் படுகின்றன. ஒரு நீண்ட செவ்வக வடிவ மேஜையின் நடுவில், முக்கோண வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோளங்களை நான்கு திசைகளிலும்  சிதறடிக்க வைப்பதில் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி தான் ஸ்னூக்கர் என்ற இந்த விளையாட்டின் பலம். மேஜையின் நடுவில் இருக்கும் கோளங்கள் திடீரென நீண்டு வளர்ந்து நடந்து மேஜையின் ஒரு பக்கமாக ஒதுங்கினாலும் நாம் விடுவதில்லை. அதைவிட… Continue reading மீண்டுமொரு இளைப்பாறல்

Advertisement

ஆத்திகமும் அண்ணாவும்

கடவுள் இவ்வுலகை படைக்கவில்லை; கடவுள் தான் இவ்வுலகம் என மகாயான பௌத்தம் சொல்லும். இது நாத்திகமா? இல்லை ஆத்திகமா?. கடவுள் இல்லை  என்பது நாத்திகமானால், கடவுள்தான் இவ்வுலகமாக இருக்கிறார் என்ற பௌத்தம் ஆத்திகம்தான். கடவுள்தான் இவ்வுலகைப் படைத்தார் என்பது ஆத்திகமானால், பௌத்தம் நாத்திகம்தான்.  தலைசுற்ற ஆரம்பிக்கிறது. கடவுள் இல்லை என்பதும்; கடவுள் இவ்வுலகை படைக்கவில்லை என்பதும் எப்படி வெவ்வேறாக இருக்க முடியும். எளிய மனங்கள், தங்கள் நிலையாமையை கடந்து செல்வதற்காக உருவாக்கிக் கொண்ட கடவுள் என்ற கருத்தாக்கத்தை… Continue reading ஆத்திகமும் அண்ணாவும்

சிவனின் சந்திரன்

தோல்விகளைக் கொண்டாடத் தெரிந்த சமூகங்கள் முதிர்ச்சியானவை என்பார்கள். மோடியின் தோள்களில் புதைந்திருந்த சிவன் கலங்கியிருந்தாலும், அந்த கண்களின் தீர்க்கத்திற்கு குறைவில்லை. இவர் வகிக்கும் பொறுப்புக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவைத் தாண்டி தேவைப்படுவது ஒன்றில் தன்னைக் கரைத்துக் கொள்ள உதவும் அர்ப்பணிப்பும், அதிலிருந்து எழும் பொறுப்புணர்ச்சியும்தான். இவ்விரண்டும்தான், கலங்கியிருந்த சிவனின் கண்களில் நிரந்தரமாக குடியிருக்கும் அந்த தீர்க்கத்திற்கு காரணமாக இருக்க முடியும். இதுபோன்ற தீர்க்கமானவர்களின் தோல்விகளை ஒட்டுமொத்த இந்தியாவும் தாங்கிப் பிடிப்பதில் ஆச்சரியமில்லை.  சந்திராயனின் ஒட்டுமொத்த பயணத்தையும்… Continue reading சிவனின் சந்திரன்

கண்டுகொண்டேன்

செட்டிநாட்டு வீடுகளுக்கே உரிய பிரமாண்ட முகப்பு கொண்ட வீடு. தெருவிலிருந்து கிட்டத்தட்ட ஐந்தாறடி உயரத்தில் வீட்டின் நுழைவாயில். இரண்டாள் உயரமிருக்கும்,  நுழைவாயில் கதவை அடைவதற்கான அப்படிகளின் அகலம். எரிக்கும் காரைக்குடி வெயிலிலும் தான் அணிந்திருந்த இரண்டாம் அடுக்கு மேலாடையை சரி செய்துவிட்டு, கலைவதற்கு வாய்ப்பேயில்லாத தலைமுடியை கலைந்ததாய் நினைத்து சரி செய்து கொண்டே படிகளில் ஏறியவரை  மரியாதையும் வெட்கமும் கலந்த புன்னகையோடு வரவேற்கிறார் ஸ்ரீவித்யா. சினிமாவிற்காக அவ்வீட்டை வாடகை பேச வந்திருந்த தனக்கு கிடைத்த மரியாதையால் புழங்காகிதமடைகிறார்… Continue reading கண்டுகொண்டேன்