பாபநாசமும் நீதியும்

தன் பதவி அல்லது தொழில் தந்த இறுமாப்பு போர்வை கலைந்து, இல்லை, கலையப்பட்டு பாபநாச அருவியருகே நிற்கிறார் அந்த பணம் படைத்த அல்லது பணத்தின் அருமை புரியாத மகனின் தாய். தன் மகன் இன்னமும் உயிரோடு இருக்கமாட்டானா என்ற பரிதவிப்பு, தன் பையனை சரியாக வளர்க்கவில்லை என்ற இயலாமை, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய இறுமாப்பை கலைத்துப் போட்ட அந்த பாசக்கார தந்தையின் புத்திசாலித்தனம் என எல்லாம் சேர்ந்து அத்தாயின் உடலை குறுக்கியிருந்தது. அத்தாயின் நடுக்கத்தில், அந்த… Continue reading பாபநாசமும் நீதியும்

Advertisement

அஞ்சலி

கலைந்து போயிருந்த குருவிக் கூடுபோல பாழடைந்து போயிருக்கும் கேசம். ஆனால், தனக்குள் இன்னும் எத்தனை குருவியை வேண்டுமானாலும் குடிவைக்கும் ஆற்றலும், ஆசையும் இருக்கிறது என்பதுபோல் அக்குழந்தையின் தலையிலிருந்து எழும்பிக் குதித்து தோள்களில் புரண்டோடியது. மன வளர்ச்சி குன்றியவர்களை பராமரிக்கும் ஒரு காப்பகத்தின் தோட்டத்தில் தன் அடர்ந்த கேசத்தை அங்குமிங்கும் ஆட்டி தன்னுடைய பயிற்சியாளருடன் ஒரு விளையாட்டில் ஆத்மார்த்தமாக தன்னை பிணைத்திருந்தாள் அஞ்சலி. "Mrs. Sekar, அப்ப நீங்க ஒரு complicated cesarian operationக்கு அப்புறம் ரொம்ப  weakஆ… Continue reading அஞ்சலி