வர்க்கம் சாதி நீட்டு – பகுதி 1

வர்க்கம், சாதி, சமூகநீதி என ஒன்றுக்கொன்று தொடர்புடைய இவற்றை என்னுடைய இது நாள் வரை வாசிப்பின் வழியாக தெளிவு படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியே இப்பதிவு. உங்களை குழப்பி தெளிவு பெறும் முயற்சியல்ல இது.   வர்க்கங்களாக சமநிலையில் கலந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் எவ்வாறு வெவ்வேறு சாதிகளாக பிரிந்தார்கள் அல்லது உருமாறினார்கள் என்பதை முதன்முதலாக ஆக்கப்பூர்வமாக ஆராய முற்பட்டு அதில் வெற்றியும் கண்டவர் அம்பேத்கர். ஒரு குறிப்பிட்ட வர்க்கம் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பியதின் விழைவு… Continue reading வர்க்கம் சாதி நீட்டு – பகுதி 1

இலக்கணமும் இலக்கியமும்

  கோவில் யானைக்கு சங்கிலியைக் கட்டி அதன் பலத்தை மறக்கடித்து அதன் எல்லைகளை குறுக்குவதைத் போலத்தான் இலக்கணம் படைப்பாளிகளின் படைப்புத் திறனைக் குறுக்கியுள்ளது.   இந்த பாவனையிலிருந்து  மீளும்போது மட்டுமே இலக்கியம் படைக்கமுடியும்.   இலக்கணத்தின் படி எழுதப்பட்ட சில பாடல் வரிகள்: *🖌அடுக்குத்தொடர்: ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். *🖌இரட்டைக்கிளவி: ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே. *🖌சினைப்பெயர்: பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா. *🖌பொருட்பெயர்:  கண்ணன் என்னும் மன்னன் பெயரைச்… Continue reading இலக்கணமும் இலக்கியமும்

கோண்டுகளும் மனிதக்குதிரைகளும்

எழுதுபவர்களுக்கு மேடையில் உரையாற்றுவது வசப்படுவதில்லை என்பதற்கு விதிவிலக்கு எழுத்தாளர் ஜெயமோகன். படிப்படியாக தன் பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொணடவர். மிக நீண்ட, அதே சமயத்தில் மிகச் செறிவானவை அவருடைய உரைகள். தன்னுடைய வாசிப்பெனும் கடலில் இருந்து மத்து கொண்டு கடைந்தெடுத்தவை.   இச்செறிவான உரைகளை முழுமையாக உள்வாங்கி செரித்துக் கொள்ள முடியுமென்றால், ஒரு குறுநாவலே எழுதிவிடமுடியும். என்னால் முடிந்தது இச்சிறிய பதிவு மட்டுமே.   சமீபத்தில் அவர் செங்கல்பட்டில் ஆற்றிய உரையிலிருந்து கருக்கொண்டு புனையப்பட்ட பதிவு இது.… Continue reading கோண்டுகளும் மனிதக்குதிரைகளும்

பெண்ணியம் எனும் மேட்டிமைவாதம்

  நள்ளிரவு கடந்து கொண்டிருந்தது. நிலவொளி மங்கி அந்த மொட்டை மாடியைத் தழுவியிருந்தது. கோடை இரவாக இருந்தாலும் கடற்கரையிலிருந்து வரும் மெல்லிய காற்று இருவரின் வியர்வையையும் அடக்கியிருந்தது.   நடுவே சிறு வட்ட வடிவிலான மேஜை. எதிரெதிராக இரு நாற்காலிகள். மேஜையில் இரண்டு மூன்று தமிழ் நாவல்கள். திஜாவின் மரப்பசு, இபாவின் வேர்ப்பற்று மற்றும் ஜெமோவின் இரவு...அப்போ அந்த நாற்காலியில்...   நீங்கள் ஊகித்தது சரிதான். இரண்டு எழுத்தாள அறிவுஜீவிகள் தான் அங்கே ஒரு சுவாரஸ்யமான விவாதத்தில்… Continue reading பெண்ணியம் எனும் மேட்டிமைவாதம்

வேதங்கள் யாருக்குரியது?

http://www.jeyamohan.in/102895#.WgB4mctX7R4 தலித் அர்ச்சகர்களுக்கு வேதசாஸ்திரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற பொதுப்புத்தியிலுள்ள குறைபாட்டை சரி செய்திருக்கிறது ஜெமோவின் இந்த கட்டுரை.   அம்பேத்கருக்கும், நாராயணகுருவுக்கும் தான் எவ்வளவு ஒற்றுமை. இருவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்கள் சொந்தமாக்கப்பட்டிருந்த காலத்திலேயே அவ்வேதங்களையும் சாஸ்திரங்களையும் வலிந்து விரும்பி கற்றறிந்த மேதைகள்.   எளியவர்களை அடிமைப்படுத்தவே சாஸ்திரங்கள் திரிக்கப்பட்டுள்ளன எனபதை நன்குணர்ந்தவரகள் இவ்விருவரும்.   பிராமணப் பெற்றோருக்கு பிறந்ததால் மட்டுமே ஒருவர் புரோகிதராகி விடக்கூடாதென்பதிலும், வேதங்களை கற்றுணர்ந்தவர்கள் மட்டுமே புரோகிதராக… Continue reading வேதங்கள் யாருக்குரியது?

உடலைப் பிழியும் ஓட்டம்

  தண்ணீர் சலசலத்து ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது. நம்மைப் போல் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறோம் என்ற கவலையெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை அதற்கு. அக்கவலையின்மையே அவ்வோடையின் ஓட்டத்திற்கு ஒரு துள்ளலையும் நளினத்தையும் தருவதாக எண்ணத் தோன்றியது.   கிட்டத்தட்ட  3000 அடி உயரம் அலையில்லா கடல் மட்டத்திலிருந்து. ஆக்ஸிஜனின் பற்றாக்குறையை உடல் எனக்கு உணர்த்த ஆரம்பித்ததிருந்தது.  சுற்றியுள்ள ஆக்ஸிஜனையெல்லாம் உறிஞ்சிக் கொண்டு தான் தண்ணீராக இவ்வோடை உருமாறியுள்ளதோ என விஞ்ஞானி போல சிந்தித்து கவிஞன்போல ஓடையின் துள்ளலை பொறாமையோடு ரசித்துக் கொண்டிருந்தேன்.… Continue reading உடலைப் பிழியும் ஓட்டம்

சொற்களும் பொருள்களும்

எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையான 'பெரியம்மாவின் சொற்கள்' ஆங்கிலமொழி பெயர்ப்புக்கு Asymptote எனும் சர்வதேச இலக்கிய இதழின் விருது கிடைத்ததையொட்டி அவருக்கு எழுதிய கடிதமிது. http://www.jeyamohan.in/100665#.Wf2DqctX7R4 மேலுள்ள சுட்டியில் விருது பற்றிய விவரங்கள் உள்ளன. ஜெமோ,         "பெரியம்மாவின் சொற்கள்",  வாசிப்பு என்னை எங்கெல்லாம் அழைத்துச் சென்று என்னவெல்லாம் எழுதவைக்கும் என்பதிற்கு உதாரணம். என்னுடைய கீழ்கண்ட பதிவில் உள்ள அனைத்தும் உங்களிடம் பெற்றதே, பெரியம்மாவின் சொற்களின் வழியாக அவை தன்னை பிரதி எடுத்துக்கொண்டுள்ளன. உங்களை வாசிக்கும்… Continue reading சொற்களும் பொருள்களும்

அறிவுஜீவிகளின் சத்தம்

எழுத்தாளர் ஜெயமோகனின் சென்னை வெண்முரசு வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்கள் கடந்த மாதம்  உயர்தத்துவங்களைப் பற்றிய ஒரு அறிமுக வகுப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவ்வகுப்பை நடத்திய ஆசிரியருக்கு 70 வயதுக்கு மேல். ( குறிப்பு: வெண்முரசு எனபது ஜெமோ எழுதி வரும் மகாபாரத நாவல் வரிசையின் தொகுப்புப் பெயர்.) மேலைநாட்டுத் தத்துவங்களுக்கும், இந்திய தத்துவங்களுக்கும் உள்ள தொடர்புகளையும் வேறுபாடுகளையும் அந்த மூன்று நாட்களும் அள்ளித் தெளித்திருந்தார். அங்கிருந்த அனைவருக்கும் அது ஒரு பெரும்திறப்பாக அமைந்தது. உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், சற்றும்… Continue reading அறிவுஜீவிகளின் சத்தம்

பொற்காலம் 20

https://cinema.vikatan.com/tamil-cinema/news/106297-20-years-of-porkkaalam-movie-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2 மனதை விட்டு அகலாத காலம், இந்த பொற்காலம். இப்படத்தின் கடைசி 30 நிமிடங்கள் இப்போது நினைத்தாலும்  எடை மிகுந்து மனம் கனத்து நகர முடியாமல் ஒரே இடத்தில் நம்மை உறையச் செய்கிறது. தன் உடலூனத்தால் அண்ணனுக்கு பாரமாயிருக்கிறோமே என்ற மன உளைச்சலைப் போக்கிக் கொள்ள ஒரு தனிமை வேண்டி களிமண் பானைகளைச் சுடும் சூளையில் தஞ்சமடைகிறாள் அந்த வாய் பேசமுடியாத தங்கை. இதையறியாமல், வழக்கம்போல் அச்சூளைக்கு எரியிடுகிறான் அண்ணன் முரளி. சிறிது நேரத்தில் சூளையின் வெம்மையை… Continue reading பொற்காலம் 20

இருள் எனும் அறியாமை

ஒரு அழகான பெண்ணைப் பார்த்தவுடன், அவளின் அழகுக்கான காரணத்தை ஆராய முற்படுபவன் விஞ்ஞானி; அவள் ஏன் எனக்கு அழகாகத் தோன்றுகிறாள் என எண்ணுபவன் மெய்ஞ்ஞானி.   ஆனால் அந்தப் பெண்ணைப் பொறுத்தவரை இரண்டு பேருமே உதவாக்கரைகள் தான்.   ஆனால், எது உண்மை? விஞ்ஞானி கண்டடைந்ந புறவயக்(objevtive) காரணங்களா?; இல்லை, மெய்ஞ்ஞானி கண்டடைந்த அகவயக்(subjetive) காரணங்களா?.   நாம் அறிவதெல்லாம் நம்மையே என்கின்றன, இங்குள்ள அனைத்து உயர்தத்துவங்களும். நம்முடைய புலன்களைத் தாண்டி நம்மால் எதையும் அறிய முடிவதில்லை.… Continue reading இருள் எனும் அறியாமை