https://muthusitharal.com/2018/12/25/விஷ்ணுபுரம்-விருது-விழா-2018-da/ முன்பு நரன்- சாம்ராஜ் - ஒரு 'அற்புதக்' கூட்டணி சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் இருக்கும் வாசகர் பரப்பு கவிதைகளுக்கு ஏன் இல்லை என்ற கேள்விக்குப் பதிலாக, கவிதை வாசகனின் அதீத உழைப்பைக்கோரும் இலக்கிய வடிவம். இந்த அறிவியக்கச் செயல்பாடு காரணமாகத்தான் பெரும்பாலான வாசகர்கள் கவிதையிலிருந்து விலகியிருக்கிறார்கள் என்றார் சாம். அது சரி வலுவுள்ளவர்கள் தானே வைரம் வாங்கமுடியும் என்றெண்ணியபோது, அறிவியக்கவாதிகளான புரோலட்டேரியன்களை (கம்யூனிச தோழர்கள்) அற்புதமாய் ‘அற்புதம்’ என்ற அவர்களுடைய வார்த்தையை வைத்தே கலாய்த்துவிட்டார். https://muthusitharal.com/2018/12/25/விஷ்ணுபுரம்-விருது-விழா-2018-da/ ‘அற்புதம்’… Continue reading விஷ்ணுபுரம் விருது விழா – Day 1 Part 2
Month: December 2018
விஷ்ணுபுரம் விருது விழா 2018 -Day 1-Part 1
தன் இரண்டு உள்ளங்கைகளையும் கைதட்டுவது போல் இணைத்து “எனக்கு இந்த ஆய்வும் புனைவும் இப்படித்தான் ஒட்டியிருக்கு. இப்படி இரண்டும் struck ஆகிப்போனது தான் என் கோளாறுன்னு என் வீட்டுக்காரம்மா கூட சொல்றாங்க” என்று ஒட்டிய உள்ளங்கைகளை பிரிக்க முயன்று தோற்பதுபோல் பாவனை காட்டினார் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் நாயகன் ராஜ்கௌதமன். “ஆனா..இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு…” என ஒட்டியிருந்த கைகளை பிரித்து இடதுதோளை உடம்போடு ஒட்டிக்கொண்டு, இடதுகை சுட்டுவிரலை மட்டும் உயர்த்தி, வலது தோளை சற்றுத் தாழ்த்தியது, பெரிய மேடைகளில்… Continue reading விஷ்ணுபுரம் விருது விழா 2018 -Day 1-Part 1
டிசம்பர் கொண்டாட்டம் – Part 2
https://muthusitharal.com/2018/12/15/டிசம்பர்-கொண்டாட்டம்-part-1/ மணி 12த் தொட்டுக்கொண்டிருந்தது. அந்த சதுர வடிவ அறையிலிருந்த அடர் சிவப்பு நிற இருக்கைகள் மொத்தமாக நிரம்பியிருந்தது. அறையின் கிழக்குப்பகுதியை வெண்திரையும், மையப்பகுதியை தொகுப்பாளர்களும் கணிணிகளும் எடுத்துக்கொள்ள மூன்று திசைகளிலும் ‘ப’ வடிவில் அமர்ந்திருந்த அனைவரும் நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். “என்னது மறுபடியும் வர்ணாசிரமா? “ என்று திராவிடச்சிங்கங்கள் சிலர் முழங்கினர். வழக்கம்போல், எங்களுடைய தொழில்நுட்பப் பிரிவு வங்கிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தல உமா சுருக்கமாக முடித்துக்கொள்ள, அங்கிருந்த தொகுப்பாளர்கள் வெகு இலாவகமாக ஒட்டுமொத்த… Continue reading டிசம்பர் கொண்டாட்டம் – Part 2
டிசம்பர் கொண்டாட்டம் – Part 1
“I need a queen from this Group to Play the Game called ‘Queen of Sheeba’...” என புன்னகைத்துக் கொண்டே தொகுப்பாளர் அந்த அறையில் கூடியிருந்தவர்களை சுற்றுமுற்றும் நோக்க, இயல்பாகவே அங்கிருந்த பெண்களின் கைகள் தங்கள் கூந்தலை கோத ஆரம்பித்திருந்தது, எங்கே தன்னை அழைத்து விடுவார்களோ என்ற மெல்லிய பதற்றத்தோடு. அங்கிருந்த ராணிகளின் முகத்தில் சிறு கீற்றாக தோன்ற ஆரம்பித்த வெட்கப் புன்னகை, “All women are Queens only” என்ற அங்கிருந்த… Continue reading டிசம்பர் கொண்டாட்டம் – Part 1
பொறியன் டூடாட்ஓ
கைவிடப்பட்ட அந்த விவசாய நிலத்தைவிட்டு சூரியனும் தன் கதிர்களை வெகு விரைவாக விலக்கிக் கொண்டிருக்கும் ஒரு மாலைப்பொழுது அது. நெல் நாற்றுகளுக்குப் பதிலாக அங்கு நடப்பட்டிருந்த கைப்பேசிகளுக்கு உயிரளிக்கும் நெடிய கோபுரத்தை நோக்கி தன்தோள்களிரண்டும் தளர , நடை தடுமாற, தலைதுவள கைகளிரண்டையும் விரித்து உயர்த்தியவாரே ‘'நன்னயப் புள்ளினங்காள் …” என்று முனகி முழங்கிச் செல்கிறார் ஒரு முதியவர். இப்பொன்னுலகமும், பிரபஞ்சமும் பறவைகளால் ஆனது; ஆளப்படுவது என்ற நம்மாழ்வாரின் வரிகளான "பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்" என்ற… Continue reading பொறியன் டூடாட்ஓ
காந்தி ஆசாரியா?
பள்ளிக்கூடப் புத்தகத்தின் அட்டைப்படத்திலுள்ள அம்பேத்கரின் நிலைமையை மாரி செல்வராஜ் விவரிக்க விவரிக்க, அவருடைய வேதனை நமக்கும் தொற்றிக் கொண்டது. ஒரு இயக்குனருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய தகுதியான உடல் மொழி, அவருடைய ஆழ்மனத்திலுள்ள தாழ்வு மனப்பான்மையை சிதறடித்துக் கொண்டு மேலெழும்பி ததும்பி வழிந்து அங்கிருந்த அனைவரையும் ஆட்கொண்டு உறைய வைத்தது. அந்த உறைந்த கூட்டத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும் ஒருவர். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை கே.கே.நகரிலுள்ள டிஸ்கவரி புத்தக நிறுவனத்தில் ஏற்பாடு… Continue reading காந்தி ஆசாரியா?