http://www.jeyamohan.in/102895#.WgB4mctX7R4
தலித் அர்ச்சகர்களுக்கு வேதசாஸ்திரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற பொதுப்புத்தியிலுள்ள குறைபாட்டை சரி செய்திருக்கிறது ஜெமோவின் இந்த கட்டுரை.
அம்பேத்கருக்கும், நாராயணகுருவுக்கும் தான் எவ்வளவு ஒற்றுமை. இருவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்கள் சொந்தமாக்கப்பட்டிருந்த காலத்திலேயே அவ்வேதங்களையும் சாஸ்திரங்களையும் வலிந்து விரும்பி கற்றறிந்த மேதைகள்.
எளியவர்களை அடிமைப்படுத்தவே சாஸ்திரங்கள் திரிக்கப்பட்டுள்ளன எனபதை நன்குணர்ந்தவரகள் இவ்விருவரும்.
பிராமணப் பெற்றோருக்கு பிறந்ததால் மட்டுமே ஒருவர் புரோகிதராகி விடக்கூடாதென்பதிலும், வேதங்களை கற்றுணர்ந்தவர்கள் மட்டுமே புரோகிதராக வேண்டுமென்பதிலும் உறுதியாக இருந்தவர்கள் இவ்விருவரும்.
ஆனால் வெறுப்பின் உச்சமாக, சாஸ்திரங்கள் உடைத்தெரியப்பட்டாலே இந்து சமூகங்களில் சாதி ஒழிந்து சமூகநீதி நிலைநாட்டப்பட முடியுமென்று இந்து மதத்தை விட்டே வெளியேறினார் அம்பேத்கர். காலம் செய்த கோலமிது. இந்து மதத்தை வெறும் சடங்குகளாக குறுக்கிய சில புரோகிதக் கூட்டங்களைப் போலவே இவரும் கணநேரத்தில் சறுக்கிப் போனார். அறிவுஜீவிகளுக்கே உரிய சறுக்கலிது.
மாறாக நாராயணகுரு, வேதங்களும் சாஸ்திரங்களும் ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே சொந்தமாக இருக்க முடியாதென்ற உண்மையை உணர்ந்திருந்தார். தொடர்ந்து அதைக் கற்று, சடங்குகள் மட்டுமே இந்து மதமில்லை என ஒரு புரிந்துணர்வுக்கு வந்ததின் விளைவே இன்று நாம் கேரளத்தில் காணும் நாராயணகுரு மரபு. அதன் விளைவே இன்று பிராமணல்லாதவரும் அர்ச்சகர்கள் ஆகியிருப்பது என தரவுகளுடன் சுட்டிக்காட்டியுள்ளது இக்கட்டுரை.
குறிப்பு: நாராயணகுரு கேரளாவில் உள்ள ஈழவர் சாதியை சேர்ந்தவர். நான்கு தலைமுறைகளாக அவரினத்தவர் வேத சாஸ்திரங்களை கற்று வருகிறார்கள்.