நள்ளிரவு கடந்து கொண்டிருந்தது. நிலவொளி மங்கி அந்த மொட்டை மாடியைத் தழுவியிருந்தது. கோடை இரவாக இருந்தாலும் கடற்கரையிலிருந்து வரும் மெல்லிய காற்று இருவரின் வியர்வையையும் அடக்கியிருந்தது. நடுவே சிறு வட்ட வடிவிலான மேஜை. எதிரெதிராக இரு நாற்காலிகள். மேஜையில் இரண்டு மூன்று தமிழ் நாவல்கள். திஜாவின் மரப்பசு, இபாவின் வேர்ப்பற்று மற்றும் ஜெமோவின் இரவு...அப்போ அந்த நாற்காலியில்... நீங்கள் ஊகித்தது சரிதான். இரண்டு எழுத்தாள அறிவுஜீவிகள் தான் அங்கே ஒரு சுவாரஸ்யமான விவாதத்தில்… Continue reading பெண்ணியம் எனும் மேட்டிமைவாதம்
Month: November 2017
வேதங்கள் யாருக்குரியது?
http://www.jeyamohan.in/102895#.WgB4mctX7R4 தலித் அர்ச்சகர்களுக்கு வேதசாஸ்திரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற பொதுப்புத்தியிலுள்ள குறைபாட்டை சரி செய்திருக்கிறது ஜெமோவின் இந்த கட்டுரை. அம்பேத்கருக்கும், நாராயணகுருவுக்கும் தான் எவ்வளவு ஒற்றுமை. இருவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்கள் சொந்தமாக்கப்பட்டிருந்த காலத்திலேயே அவ்வேதங்களையும் சாஸ்திரங்களையும் வலிந்து விரும்பி கற்றறிந்த மேதைகள். எளியவர்களை அடிமைப்படுத்தவே சாஸ்திரங்கள் திரிக்கப்பட்டுள்ளன எனபதை நன்குணர்ந்தவரகள் இவ்விருவரும். பிராமணப் பெற்றோருக்கு பிறந்ததால் மட்டுமே ஒருவர் புரோகிதராகி விடக்கூடாதென்பதிலும், வேதங்களை கற்றுணர்ந்தவர்கள் மட்டுமே புரோகிதராக… Continue reading வேதங்கள் யாருக்குரியது?
உடலைப் பிழியும் ஓட்டம்
தண்ணீர் சலசலத்து ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது. நம்மைப் போல் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறோம் என்ற கவலையெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை அதற்கு. அக்கவலையின்மையே அவ்வோடையின் ஓட்டத்திற்கு ஒரு துள்ளலையும் நளினத்தையும் தருவதாக எண்ணத் தோன்றியது. கிட்டத்தட்ட 3000 அடி உயரம் அலையில்லா கடல் மட்டத்திலிருந்து. ஆக்ஸிஜனின் பற்றாக்குறையை உடல் எனக்கு உணர்த்த ஆரம்பித்ததிருந்தது. சுற்றியுள்ள ஆக்ஸிஜனையெல்லாம் உறிஞ்சிக் கொண்டு தான் தண்ணீராக இவ்வோடை உருமாறியுள்ளதோ என விஞ்ஞானி போல சிந்தித்து கவிஞன்போல ஓடையின் துள்ளலை பொறாமையோடு ரசித்துக் கொண்டிருந்தேன்.… Continue reading உடலைப் பிழியும் ஓட்டம்
சொற்களும் பொருள்களும்
எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையான 'பெரியம்மாவின் சொற்கள்' ஆங்கிலமொழி பெயர்ப்புக்கு Asymptote எனும் சர்வதேச இலக்கிய இதழின் விருது கிடைத்ததையொட்டி அவருக்கு எழுதிய கடிதமிது. http://www.jeyamohan.in/100665#.Wf2DqctX7R4 மேலுள்ள சுட்டியில் விருது பற்றிய விவரங்கள் உள்ளன. ஜெமோ, "பெரியம்மாவின் சொற்கள்", வாசிப்பு என்னை எங்கெல்லாம் அழைத்துச் சென்று என்னவெல்லாம் எழுதவைக்கும் என்பதிற்கு உதாரணம். என்னுடைய கீழ்கண்ட பதிவில் உள்ள அனைத்தும் உங்களிடம் பெற்றதே, பெரியம்மாவின் சொற்களின் வழியாக அவை தன்னை பிரதி எடுத்துக்கொண்டுள்ளன. உங்களை வாசிக்கும்… Continue reading சொற்களும் பொருள்களும்
அறிவுஜீவிகளின் சத்தம்
எழுத்தாளர் ஜெயமோகனின் சென்னை வெண்முரசு வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் உயர்தத்துவங்களைப் பற்றிய ஒரு அறிமுக வகுப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவ்வகுப்பை நடத்திய ஆசிரியருக்கு 70 வயதுக்கு மேல். ( குறிப்பு: வெண்முரசு எனபது ஜெமோ எழுதி வரும் மகாபாரத நாவல் வரிசையின் தொகுப்புப் பெயர்.) மேலைநாட்டுத் தத்துவங்களுக்கும், இந்திய தத்துவங்களுக்கும் உள்ள தொடர்புகளையும் வேறுபாடுகளையும் அந்த மூன்று நாட்களும் அள்ளித் தெளித்திருந்தார். அங்கிருந்த அனைவருக்கும் அது ஒரு பெரும்திறப்பாக அமைந்தது. உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், சற்றும்… Continue reading அறிவுஜீவிகளின் சத்தம்
பொற்காலம் 20
https://cinema.vikatan.com/tamil-cinema/news/106297-20-years-of-porkkaalam-movie-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2 மனதை விட்டு அகலாத காலம், இந்த பொற்காலம். இப்படத்தின் கடைசி 30 நிமிடங்கள் இப்போது நினைத்தாலும் எடை மிகுந்து மனம் கனத்து நகர முடியாமல் ஒரே இடத்தில் நம்மை உறையச் செய்கிறது. தன் உடலூனத்தால் அண்ணனுக்கு பாரமாயிருக்கிறோமே என்ற மன உளைச்சலைப் போக்கிக் கொள்ள ஒரு தனிமை வேண்டி களிமண் பானைகளைச் சுடும் சூளையில் தஞ்சமடைகிறாள் அந்த வாய் பேசமுடியாத தங்கை. இதையறியாமல், வழக்கம்போல் அச்சூளைக்கு எரியிடுகிறான் அண்ணன் முரளி. சிறிது நேரத்தில் சூளையின் வெம்மையை… Continue reading பொற்காலம் 20