என்னதான் முதிர்ச்சியடைந்த மனமென்றாலும், உருமாறியிருந்த அந்த முகம் சந்தனபேழையினுள் இட்டு மூடப்படும்போது அதுவரை இமையெனும் அணையால் தடுக்கப்பட்டிருந்த கண்ணீர் அவ்வணையை உடைத்துக் கொண்டு வழிந்தோட ஆரம்பித்தது. காலம் பருந்து போல பறந்து விட்டிருக்கிறது. அந்த இரும்பு மனுஷி பருந்தாய் நம்மை அடைகாப்பதை நிறுத்தி ஒரு வருடம் ஆகியிருக்கிறது. என்னதான் கொத்திக் குதறினாலும் நம்மை அடைகாத்தது அந்த அம்மையார் தான். எப்போது இந்த பருந்து தலைசாயுமென வானத்தில் வட்டமடித்து காத்துக்கொண்டிருந்த பல பருந்துகள் கீழிறங்கி… Continue reading பருந்தும் தமிழகமும்
Month: November 2017
A week day Evening at a Music Bar
ஜுவாலையே இல்லாமல் சுட்டெரிக்கும் நெருப்பாய் வெயில் மாலை நேரத்தைப் பொசுக்கிக்கொண்டிருந்தது. (சென்னையின் கோடைக்கு காலையும் மாலையும் ஒன்று தான்). சில்லென்று வருடிச் செல்லும் காற்று ஒரு வரமென்றால், அதைவிட வரம் சில்லென்ற ஒரு Beer . இவ்விரண்டையும் வேண்டி நகரில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டிருந்த music barல் தஞ்சமடைந்தேன். வழக்கம்போல் இருள் கவிழ்ந்திருந்தது barன் உள்ளே. ஆங்காங்கே சக்தி குறைந்த விளக்குகள் மெல்லிய ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன. பல மெல்லிய பேச்சுக் குரல்கள் ஒன்றினைந்து வல்லிய உளறல்களாக… Continue reading A week day Evening at a Music Bar
விதையும் மனிதனும்
அழுத்தம் (stress) இருந்து கொண்டேதான் இருக்க வேண்டியுள்ளது முன்னகர்வதற்கும், அடைந்த இடத்தை தக்கவைப்பதற்கும். மண்ணின் செறிவும் அழுத்தமும் தான் வளரத் துடித்த விதை வளர்ந்ததிற்கும், அது வளர்ந்து மரமாய் நீடித்திருப்பதிற்கும் காரணம். ஆக அழுத்தம் விதைக்கு அழுத்தமாய் தெரிவதில்லை. அது ஒரு இழுத்துக் காக்கும் சக்தி மட்டுமே. பொறாமையால் வளரத் துடிக்கும் மனிதர்களுக்கு கிடைக்கும் அழுத்தங்கள் அழுத்தங்களே. இவற்றை நாம் இயல்பாக கடக்க முடிவதில்லை. அவை ஒரு போதும் வளர்ச்சிக்கு இழுத்து செல்வதில்லை.… Continue reading விதையும் மனிதனும்
கமலும் தலைவனும் தமிழகமும்
“யார் கடவுள்? “ என்ற கேள்விக்கு தன்னுள் (வுள்) கடந்து சென்றவன் தான் என அத்வைத (ஆதிசங்கரரின் தத்துவம்) டச் கொடுத்திருக்கிறார் கமல். தி இந்து தமிழ்ப் பத்திரிக்கையின் 5வது ஆண்டு தொடக்க விழாவில். அழகான, புத்திசாலியான துணை வேண்டும் என்ற இளையவர்களின் தவிப்பைப்போல; நொடித்து படுத்துவிட்ட குடும்பத்தை சுற்றத்தார் மெச்ச தூக்கி நிறுத்தும் ஒரு வாரிசு வேண்டி தவிக்கும் குடும்பத்தைப் போல; இழந்து தரையில் வீழ்த்தப்பட்டிருக்கும் தமிழனின் பெருமையை மீட்டெடுக்க ஒரு தலைமை வேண்டி… Continue reading கமலும் தலைவனும் தமிழகமும்
டங்கலும் பெண்ணியமும்
அமேசானில் முன்பதிவு செய்த டங்கல் தமிழ் டிவிடி அந்தா இந்தா என்று ஒரு மாதம் கழித்து வந்து சேர்ந்தது. பட் இட்ஸ் வொர்த் எ வெயிட். பல தலைசிறந்த இயக்குனர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது, எதை படத்தின் முதல் காட்சியாக வைப்பது அல்லது முதல் காட்சியை எப்படி எடுப்பது என்பது தான். இந்த தலைவலி சிறந்த எழுத்தாளர்களுக்கும் உண்டு. முழுக்கதையையும் எழுதி முடித்து விட்டு, முதல்வரிக்காக முடிவில்லாமல் தவமிருக்கும் அவஸ்தை. "என் மாமியாரிடம் கேட்டுட்டுத்தான்… Continue reading டங்கலும் பெண்ணியமும்
வாசிப்பும் எழுத்தும்
காற்றில் மிதப்பது போல் உள்ளது. என்னுடைய இரு கடிதங்கள் இன்று எழுத்தாளர் ஜெமோவின் (ஜெயமோகன்) இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது முதல் தடவை இல்லையென்றாலும், ஒவ்வொரு தடவையும் இந்தப் பரவசம் மட்டும் முளைத்து கொண்டே இருக்கிறது. தொடர்பு கொள்ளலென்பது (communication) உணர்வுருவங்களாகவும் (emojis), விருப்பங்களாகவும்(likes) மற்றும் ஓரிருவரி பின்னூட்டங்களாகவும்(comments) சுருங்கி விட்ட சமூகவலைத் தொடர்பு மிகுந்திருக்கும் நவீனச் சூழலில், கடிதமா? இந்த காலத்திலா? அதுவும் எழுத்தாளருக்கா? எனற கேள்விகள் முடிவில்லாமல் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. … Continue reading வாசிப்பும் எழுத்தும்
சாதி வர்க்கம் நீட்டு – பகுதி 2
https://muthusitharal.wordpress.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பகு/?preview=true (பகுதி ஒன்றின் சுட்டி) ஏன் சாதி இந்த பூட்டிற்கான அவசியமென்ன? ஏன் வர்க்கங்களாக ஒற்றுமையாக இருந்தவர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். மார்க்ஸியத்தின் வரலாறு எவ்வாறு இயங்கி முன்னகரும் என்பதைக் கொண்டு இதை புரிந்து கொள்ள முயல்கிறேன். தொடரும்...... தொடர்ச்சி..... பேரரசுகளின் தோற்றம் பேரரசுகளின் உருவாக்கத்திற்கும் சாதியின் தோற்றத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. குறுநில அரசுகளாக இருந்தபோது வர்க்கங்களுக்கிடையே போட்டிமனப்பான்மையோ அதன் பொருட்டு விளையும் வேற்றுமைகளோ பெரிய அளவில் இருந்திருக்க வாய்ப்பில்லை. … Continue reading சாதி வர்க்கம் நீட்டு – பகுதி 2
வர்க்கம் சாதி நீட்டு – பகுதி 1
வர்க்கம், சாதி, சமூகநீதி என ஒன்றுக்கொன்று தொடர்புடைய இவற்றை என்னுடைய இது நாள் வரை வாசிப்பின் வழியாக தெளிவு படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியே இப்பதிவு. உங்களை குழப்பி தெளிவு பெறும் முயற்சியல்ல இது. வர்க்கங்களாக சமநிலையில் கலந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் எவ்வாறு வெவ்வேறு சாதிகளாக பிரிந்தார்கள் அல்லது உருமாறினார்கள் என்பதை முதன்முதலாக ஆக்கப்பூர்வமாக ஆராய முற்பட்டு அதில் வெற்றியும் கண்டவர் அம்பேத்கர். ஒரு குறிப்பிட்ட வர்க்கம் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பியதின் விழைவு… Continue reading வர்க்கம் சாதி நீட்டு – பகுதி 1
இலக்கணமும் இலக்கியமும்
கோவில் யானைக்கு சங்கிலியைக் கட்டி அதன் பலத்தை மறக்கடித்து அதன் எல்லைகளை குறுக்குவதைத் போலத்தான் இலக்கணம் படைப்பாளிகளின் படைப்புத் திறனைக் குறுக்கியுள்ளது. இந்த பாவனையிலிருந்து மீளும்போது மட்டுமே இலக்கியம் படைக்கமுடியும். இலக்கணத்தின் படி எழுதப்பட்ட சில பாடல் வரிகள்: *🖌அடுக்குத்தொடர்: ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். *🖌இரட்டைக்கிளவி: ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே. *🖌சினைப்பெயர்: பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா. *🖌பொருட்பெயர்: கண்ணன் என்னும் மன்னன் பெயரைச்… Continue reading இலக்கணமும் இலக்கியமும்
கோண்டுகளும் மனிதக்குதிரைகளும்
எழுதுபவர்களுக்கு மேடையில் உரையாற்றுவது வசப்படுவதில்லை என்பதற்கு விதிவிலக்கு எழுத்தாளர் ஜெயமோகன். படிப்படியாக தன் பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொணடவர். மிக நீண்ட, அதே சமயத்தில் மிகச் செறிவானவை அவருடைய உரைகள். தன்னுடைய வாசிப்பெனும் கடலில் இருந்து மத்து கொண்டு கடைந்தெடுத்தவை. இச்செறிவான உரைகளை முழுமையாக உள்வாங்கி செரித்துக் கொள்ள முடியுமென்றால், ஒரு குறுநாவலே எழுதிவிடமுடியும். என்னால் முடிந்தது இச்சிறிய பதிவு மட்டுமே. சமீபத்தில் அவர் செங்கல்பட்டில் ஆற்றிய உரையிலிருந்து கருக்கொண்டு புனையப்பட்ட பதிவு இது.… Continue reading கோண்டுகளும் மனிதக்குதிரைகளும்